Site Network: Home | Blogcrowds | Gecko and Fly | About

அபூ ஸைத் அல் அதரி
 abuzaidalathary@gamil.com

கிருஸ்தவர்களால் இறை வேதமாக நம்பப்படும் பைபிளில் உள்ள புதிய ஏற்பாட்டின் முக்கிய சுவிஷேசமான “மாற்கு எழுதிய சுவிஷேசம்” பற்றிய மூடி மறைக்கப்படும் உண்மைகளை தமிழ் பேசும் மக்கள் மத்தியில் தக்க சான்றுகளுடன் வெளிக்கொணரும் நாம் இது பற்றிய தங்களது அபிப்பிராயங்களையும் ஆலோசனைகளையும் பெரிதும் வரவேற்கிறோம்.

இன்று உலகிலுள்ள கிருஸ்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் பைபிளை இறைவேதமாக நம்புகின்றனர். குறிப்பாக இயேசு கிருஸ்துவின் வாழ்வு பற்றி பேசும் மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் என்போரால் எழுதப்பட நான்கு சுவிசேஷங்களும் இயேசுவின் சீடர்களால்  “பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டு” எழுதப்பட்டது என்று அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளனர்.

மேற்படி கிருஸ்தவர்களின் நம்பிக்கை சரியானதா அல்லது யதார்த்ததிற்கும், நிரூபிக்கப்பட்ட உண்மைகளுக்கும் மாற்றமானதாக யாரோ பெயர் தெரியாத, முகவரி இல்லாதவர்களால் எழுதப்பட்டதா என்பதை நாம் இக்கட்டுரையில் ஆராயப் போவதில்லை!

மாறாக இந்நான்கு சுவிஷேசங்களும் கிருஸ்தவர்களது நம்பிக்கைப் பிரகாரமே மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் என்பவர்களாலேயே எழுதப்பட்டது என ஒரு வாதத்திற்காக வைத்துக் கொணடாலும் கூட இந்நான்கிலும் மிக முதன்மையானதும் முக்கியமானதுமான சுவிஷேசமான “மாற்கு எழுதிய சுவிசேஷத்தில்  மிக மிக‌ பிற்பட்ட காலத்தில் அநாமோதய நபரால் எழுதப்பட்ட, இன்று காணப்படும் பழமையான, நம்பகமான(?) கையெழுத்துப்பிரதிகளில் கூட காணப்படாத சில வசனங்கள் எவ்வாறு பைபிளில் சேர்க்கப்பட்டு வேத வாக்கியங்கள் என்ற சாயம் பூசப்பட்டு கிருஸ்தவ மக்கள் ஏமாற்றப்பட்டார்கள், ஏமாற்றப்படுகிறார்கள் என்பதையே இக்கட்டுரை ஆதாரங்கள் அடிப்படையில் ஆராய்கிறது.

கட்டுரையின் மையக் கருவுக்குள் நாம் நுழைய முன் இரு முக்கிய அடிப்படைகளை புரிந்து கொள்வது விடயத்தின் ஆழ‌, அகலத்தை அறிந்து கொள்ள பெரிதும் துணை புரியும். அவைகளாவன:

1.தொலைந்து போன மூலப் பிரதிகள்:

புதிய ஏற்பாட்டின் நான்கு ஆசிரியர்களால் எழுதப்பட்டதாக கிருஸ்துவர்கள் நம்பும் மூலப்பிரதிகள் இன்று நம் மத்தியில் கிடையாது. சரி மூலப்பிரதிகள் தொலைந்ததுதான் தொலைந்தது அம்மூலப்பிரதிகளில் இருந்து பிரதி எடுக்கப்பட்ட “இரண்டாம் தலைமுறைப் பிரதிகள்” ஆவது எம்மத்தியில் காணப்படுகிறதா? என்றால் அதுவும் இல்லை! சரி,  மூலப்பிரதிகளில் இருந்து பிரதி எடுக்கப்பட்ட பிரதிகளின் பிரதிகளாவது (அதாவது மூன்றாம் தலைமுறைப் பிரதிகளாவது) இருக்கின்றதா? என ‘கண்ணில் விளக்கெண்ணை’ விட்டுக் கொண்டு தேடினாலும் ஊஹும் கிடையவே கிடையாது. மாத்திரமின்றி இன்னுமொரு படி கீழே இறங்கி வந்து மூலப்பிரதிகளின் பிரதிகளின் பிரதிகளின் பிரதிகளாவது இன்று உலகில் காணப்படுகிறதா என்றால் ஊஹும் மருந்துக்குக் கூடக் கிடையாது!

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? அதுதான் உண்மை. அப்படியானால் கிருஸ்துவர்களால் வேதமாக, இறை வசனங்களாக நம்பப்படும் பைபிளில் எதுதான் இன்றைக்கு காணப்படுகிறது? என்ற கேள்வி எம் எல்லோருக்கும் எழுவது இயற்கையே! அதற்கான பதிலாக; மிக மிக பிற்பட்ட காலங்களில், பெரும்பாலும் பல நூற்றாண்டுகள் பிந்திய காலப்பகுதிகளில் எழுதப்பட்ட பிரதிகளே இன்று உலகில் காணப்படுகின்றன!

அவைகளாவது காணப்படுகிறதே என திருப்திப்பட்டுக் கொள்ளும் நிலையிலும் இல்லை. காரணம் இவ்வாறு காணப்படும் பிரதிகளும் ஒன்றிலிருந்து இன்னுமொன்று பல்லாயிரம் இடங்களில் (எத்தனை இடங்களில் என எம்மால் மட்டிட முடியாதவாறு) அவைகளுக்கிடையில் வித்தியாசங்கள் காணப்படுகின்றன. இவ்வித்தியாசங்களின் எண்ணிக்கையை இலகுவாக சொல்வதென்றால் ஒப்பீட்டு ரீதியான பரிபாசையில் “இன்று எம்மிடமுள்ள பிரதிகளுக்கிடையில் காணப்படும் வேறுபாடுகள் புதிய ஏற்பாட்டில் காணப்படும் மொத்த சொற்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும்.”

நாம் கருத்துச் சிதைவின்றி மேற் சொன்ன இவ்வுண்மையை கிருஸ்தவ மதத்தைச் சார்ந்தவரும் பைபிள் மூலப்பிரதிகள் ஆராச்சியாளருமான “ப்ரெத் டி எர்மான்” (BRAT D. EHRMAN) என்பவர் தனது “மிஸ்கோடிங் ஜீஸஸ்” (MISQUOTING JESUS) எனும் நூலின் முன்னுரையில் 10ம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். (பார்க்க 1.)

இவ்வாறு தங்களது வேதத்தின் மூலப்பிரதிகளை தொலைத்து விட்டு விழி பிதுங்கி நிற்கும் கிருஸ்தவ சமுதாயத்தவர்களின் கைகளின் உள்ள மிக மிக பிற்பட்ட காலங்களில் எழுதப்பட பிரதிகளின் “தராதரம்” என்ன என்பதைப் பார்க்கும் போது “முல்லா சூப் காய்ச்சிய கதை” தான் எமக்கு நினைவுக்கு வருகிறது! அக்கதை என்ன என்பதைப் பார்த்து விட்டு எமது தலைப்பை தொடர்வோம்.

ஒரு முறை நஸ்ருதீன் முல்லா சூப் காய்ச்சினார். சூப் வாசனையை மோப்பம் பிடித்த நண்பர் ஒருவர் முல்லாவிடம் வந்து “முல்லாவே நான் உங்கள் நண்பரல்லவா? எனக்கும் சூப் தாருங்கள் எனக் கேட்க, அவருக்கு முல்லா சூப் கொடுத்தார். இதை அவதானித்த மற்றொருவர் அந்நண்பர் சென்றதும் முல்லாவிடம் வந்து முல்லாவே நான் உங்கள் நண்பரின் நண்பர் எனக்கும் சூப் தாருங்கள் என்றார். முல்லாவும் சரி போனால் போகிறது என அவருக்கும் சூப் கொடுத்தார். இதை அவதானித்த மற்றுமொருவரும் முல்லாவிடம் வந்து நான் உங்கள் நண்பரின் நண்பரின் நண்பர் எனக்கும் சூப் தாருங்கள் எனக் கேட்க முல்லாவுக்கு வந்ததே கோபம். அவருக்கு சூப் காச்சிய சட்டியை கழுவிய தண்ணீரை முல்லா கொடுத்தார். அதை குடித்துப் பார்த்த அந்நபரோ; முல்லா, இது சூப் மாதிரி இல்லையே என்று கேட்க முல்லாவோ; அதற்கு “இது சூப் அல்ல சூப்புடைய சூப்புடைய சூப்பு” எனக் கூறி வந்தவரை வாயடைக்க வைத்தார்.

இக்கதையை நாம் நகைச்சுவைக்காக மட்டும் எழுதவில்லை மாறாக, மூலப்பிரதிகளின், பிரதிகளின், பிரதிகளின், பிரதிகளையே தொலைத்துவிட்டு மிக மிக பிற்பட்ட காலங்களில் எழுதப்பட பிரதிகளையே வைத்திருக்கும் கிருஸ்துவர்களின் வேதமாகிய பைபிள், குறிப்பாக புதிய ஏற்பாடு “சூப்புடைய சூப்புடைய சூப்” பின் தரத்தில் தான் அமைந்திருக்கும் என்பதை உணர்த்துவதற்காகவும்தான் இதை எழுதினோம். இனி தலைப்புக்குள் வருவோம்.

2. மாற்கு எழுதிய சுவிஷேசத்தின் முக்கியத்துவம்:

மாற்கு எழுதிய சுவிஷேசத்தில் பிற்பட்ட காலத்தில் வாழ்ந்த அநாமோதய நபர்களின் கைச்சரக்கு கலக்கப்பட்டு அவைகளுக்கு “வேத வாக்கியங்கள்” என்ற சாயம் பூசப்பட்டது என நாம் முன்பு குறிப்பிட்டோம். இதன் பாரதூரத்தை, பயங்கரத்தை நன்கு புரிந்து கொள்வதற்கு கிருஸ்துவர்களுக்கு மத்தியில் மாற்கு எழுதிய சுவிஷேசத்தின் முக்கியத்துவத்தை, ஏனைய லூக்கா மற்றும் மத்தேயு எழுதிய சுவிஷேசங்களுக்கு மாற்கு எழுதிய சுவிஷேசம் எவ்வாறு மூலாதாரமாக அமைந்தது என்பதை நோக்குவது அவசியமாகும். அந்த வகையில்:

முதல் மூன்று சுவிஷேசங்கள்:

புதிய ஏற்பாட்டில் காணப்படும் முதல் மூன்று சுவிஷேசங்களான மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா சுவிஷேசங்கள் “Synoptic” என்று அறியப் படுகின்றன.  “Synoptic”  என்பதன் பொருள் “ஒன்றாகப் புரிந்து கொள்ளக்கூடியது” என்பதாகும். இம்மூன்று சுவிஷேசங்களுக்குமிடையே காணப்படும் பெருமளவான ஒற்றுமையால் மூன்றையும் ஒன்றிணைத்து கற்றுக் கொள்வது இலகுவானது என்பதனாலேயே இவ்வாறு அழைக்கப்பட்டது. இம்மூன்று சுவிஷேசங்களிலும் மாற்கு எழுதிய சுவிஷேசம் மிக முக்கியமானதாகும். அதைவிடவும் கூடுதலாக உலகில் காணப்படும் கிறிஸ்த்தவ நூற்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நூல் மாற்கு எழுதிய சுவிஷேசம் என்றும் கூறமுடியும். ஏனெனில், மாற்கு எழுதிய சுவிஷேசம்தான் முதன் முதலில் எழுதப்பட்ட சுவிஷேசம் என அனைவரும் கருத்தொற்றுமை கொண்டுள்ளனர்.

எனவே, இன்று எம்மிடையே உள்ள இயேசுவின் வாழ்வு பற்றி எழுதப்பட்ட புத்தகங்களிலேயே மிக முதன்மையானது மாற்கு எழுதிய சுவிஷேசம்தான். இதன் பொருள் மாற்கு தான் முதன் முதலில் இயேசு பற்றி எழுதினார் என்பதல்ல. மாறாக, அக்காலத்தில் இயேசு பற்றி எழுதுவதற்கான ஆரம்பகால முயற்சிகள் காணப்பட்டாலும் எம்மிடையே இன்று உள்ள இயேசு பற்றிய நூல்களில் மிகப் புராதனமானது மாற்கு எழுதிய சுவிஷேசம்தான்.

சுவிசேஷங்களின் மூலம்:

சுவிஷேசங்களின் மூலம் என்ன? அவை எதிலிருந்து எழுதப்பட்டது? என்பதை அறிந்துகொள்ள அச்சகங்களோ, அச்சடிக்கப்பட்ட நூல்களோ கண்டுபிடிக்கப்படாத பல நூற்றாண்டுகள் நாம் பின்னோக்கிப் பார்க்க வேண்டும். கரங்களால் மாத்திரம் மிகக் கஷ்டத்துடனும், கவனத்துடனும் புத்தகங்கள் எழுதப்படும் காலகட்டத்தில்தான் சுவிஷேசங்கள் எழுதப்பட்டன. எனவே அக்காலத்தில் கரங்களால் எழுதப்பட்ட வெகு சில பிரதிகளே அன்று காணப்பட்டன. அவ்வாறெனில் மாற்கு தான் இம் மூன்று சுவிஷேசங்களில் முதன் முதலில் சுவிஷேசம் எழுதினார் என்பதை நாம் எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்.

இம் மூன்று சுவிஷேசங்களையும் நாம் வாசித்துப் பார்த்தால் இவைகளுக்கிடையே குறிப்பிடத்தக்க அளவு ஒற்றுமைகளைக் காணலாம். இவைகள் ஒரேவிதமான சம்பவங்களை, ஒரேவிதமான வார்த்தைப்  பிரயோகங்களில் கொண்டுள்ளதையும் இயேசுவின் போதனைகள் ஒரே வசனப் நடையில் எடுத்தெழுதப்பட்டுள்ளதையும் கண்டுகொள்ளலாம்.

உதாரணமாக, மூன்று சுவிஷேசங்களிலும் உள்ள இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவளித்தார் என்ற சம்பவத்தை எடுத்து ஒப்பிட்டுப் பார்த்தால் (மாற்கு 6:30‍ 44, மத்தேயு 14:12 21, லூக்கா 9:10 17) ஒரே வகையான வார்த்தைகளில் ஒரே மாதிரியான முறையில் சொல்லப்பட்டுள்ளதை கானலாம்.

இதை இன்னும் தெளிவாக நோக்க, இயேசு பக்கவாதக்காரனை குணப்படுத்திய சம்பவத்தை எடுத்துக் கொண்டால் (மாற்கு 2:1-12, மத்தேயு 9:1-8, லூக்கா 5:17-‍‍26) என்ற பகுதிகள் ஒரே மாதிரி அமைந்துள்ளதுடன் அதில் “அப்போது இயேசு பக்கவாதக்காரனுக்கு சொன்னார்” என்ற வசனம் ஒரே இடத்தில் இடம் பெற்றுள்ளதையும் நாம் அவதானிக்கலாம்.

இவ்வாறு மூன்று சுவிஷேசங்களுக்கும் இடையே காணப்படும் தெளிவான ஒற்றுமை இரண்டு வகையான  எடுகோள்களுக்கு எம்மை இட்டுச் செல்கிறது.

1.மேற்படி மூன்று சுவிஷேசங்களும் ஒரே மூலத்தில் இருந்து தகவல்களைப் பெற்று எழுதப்பட்டது. அல்லது

2.இம் மூன்றில் ஒரு சுவிஷேசத்தை மூலமாகக் கொண்டு ஏனைய இரு சுவிஷேசங்களும் எழுதப்பட்டன.

இவ்விரண்டு எடுகோள்களில் எது சரியானது?

இதை இன்னும் சற்று ஆழமாக நோக்கினால், மாற்கு எழுதிய சுவிஷேசம் 105 பகுதிகளைக் கொண்டுள்ளது. இதில் 93 பகுதிகள் மத்தேயுவினதும் 81 பகுதிகள் லூக்காவினதும் சுவிஷேசங்களில் இடம் பெற்றுள்ளதைக் காண்கிறோம். 4 பகுதிகள் மாத்திரம் மத்தேயுவினதும் லூக்காவினதும் சுவிஷேசங்களில் இடம் பெறாமல் உள்ளன.

இதை இன்னும் சற்று விரிவாகப் பார்த்தால் மாற்கு எழுதிய சுவிஷேசம் மொத்தமாக 661 வசனங்களையும் மத்தேயுவின் சுவிஷேசம் 1068 வசனங்களையும் லூக்காவின் சுவிஷேசம் 1149 வசனங்களையும் கொண்டுள்ளன.

மாற்கு எழுதிய சுவிஷேசத்தில் உள்ள 661 வசனங்களில் 606 வசனங்களை மத்தேயு தனது சுவிஷேசத்தில் 51% வீதமாக உள்வாங்கியிருப்பதையும் லூக்கா 320 வசனங்களை 53% வீதமாக உள்ளடக்கியிருப்பதையும் நாம் அவதானிக்கிறோம்.

மேலும், மத்தேயு உள்ளடக்காத மாற்கின் வசனங்களில் 31 வசனங்களை லூக்கா தனது சுவிஷேசத்தில் உள்வாங்கியிருக்கிறார்.

ஆக மேற்படி ஒப்பீட்டு ரீதியான பார்வை மத்தேயுவும் லூக்காவும் தங்களது சுவிஷேசங்களை எழுதும் போது மாற்கு எழுதிய சுவிஷேசத்தை அடிப்படையாகக் கொண்டே எழுதினார்கள் என்பதை தெளிவுபடுத்துகிறது.

மேலும், நிகழ்வுகளை விவரிக்கும் முறையை எடுத்துக் கொண்டாலும் மாற்குவின் முறையையே மத்தேயுவும் லூக்காவும் பெருமளவில் பின்பற்றியுள்ளனர். மாற்குவின் விபரிக்கும் முறைக்கு மத்தேயு மாறுபடும் இடங்களில் லூக்காவும், லூக்கா மாறுபடும் இடங்களில் மத்தேயுவும் மாற்குடன் உடன்படுவது (அக்காலத்தைய இல‌க்கியத் திருட்டு என்பதற்கு அப்பால்) மத்தேயுவும், லூக்காவும் மாற்குவின் சுவிஷேசத்தை அடிப்படையாகக் கொண்டே வேறு சில விடயங்களையும் சேர்த்து தங்களது சுவிஷேசங்களை எழுதினார்கள் என்பது நிரூபணமாகிறது.

இவ்வுண்மையை கிருஸ்துவ மத போதகரும் பிரபல்ய விவிலிய விரிவுரையாளருமான வில்லியம் பார்க்லி என்பவர் தனது “மாற்கு எழுதிய சுவிஷேசம்” என்ற நூலின் முன்னுரையில் 13ம் 14ம் பக்கங்களில் எடுத்தெழுதியுள்ளார். (பார்க்க 2)

எனினும், நாம் ஏற்கனவே வலியுறுத்தியவாறு சுவிஷேசங்களை எழுதியவர்கள் ‘யார் என்றே அறியப்படாதவர்கள்’ என்றிருந்த போதிலும் கிருஸ்தவர்களது (மூட) நம்பிக்கைப் பிரகாரமே மாற்கு, மத்தேயு மற்றும் லூக்கா என்ற பெயர்களைக் குறிப்பிட்டோம் என்பதையும் அப்படி குறிப்பிட்டதன் நோக்கம் மாற்கு எழுதிய சுவிஷேசத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுவதே என்பதையும் வாசகர்களுக்கு நினைவூட்டிக் கொள்கிறோம்.

இக்கருத்தையே “மாற்கு தனது சுவிஷேசத்தை எழுதி பத்தில் இருந்து இருபது ஆண்டுகளுக்குள் மத்தேயுவும் லூக்காவும் தங்களது சுவிஷேசங்களை எழுதினார்கள் என்பதில் அதிக‌ளவான (கிருஸ்துவ) அறிஞர்கள் கருத்தொற்றுமை காண்கின்றார்கள். மத்தேயுவும் லூக்காவும்  ‘உண்மையில் இவைகளை எழுதியவர்கள் அடையாளமில்லாத நபர்கள்’ என்பதை மீண்டும் ஞாபகப்படுத்திக்கொண்டு “மாற்கு எழுதிய சுவிஷேசத்தை தங்களது சுவிஷேசங்களின் முக்கியதொரு மூலமாகக் கொண்டிருந்தார்கள்.” என ஷறோன் வார்னர் என்ற கிருஸ்துவ அறிஞர் தனது “அன் லொக்கிங் த மெஸேஜ் ஒஃப் த பைபிள்” என்ற நூலில் 75ம் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார். (பார்க்க 3)

புதிய ஏற்பாட்டின் மூலப்பிரதிகள் மட்டுமன்றி அவைகளின் பிரதிகளின், பிரதிகளின், பிரதிகளும் கூட இன்று எம்மத்தியில் இல்லை என்பதையும் இன்று உலகில் உள்ள பிரதிகள் மிகவும் பிற்பட்ட காலங்களில் எழுதப்பட்ட ஒன்றுக்கு ஒன்று வித்தியாசமான பிரதிகள் என்ற முதலாவது விடயத்தையும் மாற்கு எழுதிய சுவிஷேசம் இயேசுவின் வாழ்வு பற்றிக் கூறும் நான்கு சுவிஷேசங்களில் முதன்மையானதும் ஏனைய இரண்டு சுவிஷேசங்களுக்கு மூலாதாரமாகவும் திகழ்கிறது என்ற இரண்டாவது உண்மையையும் நினைவில் நிறுத்தியவர்களாக இக்கட்டுரையின் மையப் பகுதிக்குள் செல்வோம்.

மாற்கு எழுதிய முற்றுப் பெறாத சுவிஷேசம்


நாம் ஏலவே குறிப்பிட்டவாறு மாற்கு எழுதிய சுவிஷேசம் கிருஸ்துவர்களது நம்பிக்கைக்கு மாற்றமாக, இன்று நடைமுறையில் உள்ள பைபிள்களுக்கு மாற்றமாக முற்றுப் பெறாமல் முடிந்துள்ளது என்பது அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தும் ஆணித்தரமான உண்மையாகும்.

இவ்வாறு முற்றுப் பெறாமல் முடிந்த சுவிஷேசத்தில் ஓரிரு வார்த்தைகளை அல்ல! ஓரிரு வசன‌ங்களையும் அல்ல! பிற்பட்ட காலத்தில் பெயர் முகவரி கூட தெரியாத நபர்களால் எழுதப்பட்ட மொத்தமாக பன்னிரண்டு வசனங்களை மாற்கு எழுதிய சுவிஷேசத்துடன் இணைக்கப்பட்டு அவைகளும் “வேத வாக்கியங்கள்”  என சாயம் பூசப்பட்டன.

இவற்றை சற்று விரிவாக நோக்கும் முன்பு சம்பந்தப்பட்ட வசனங்களை சற்று நோக்கிவிடுவது இக்கட்டுரையை தொடந்தும் வாசிப்பதற்கு துணை புரியும்.
இதோ மாற்கு எழுதிய சுவிஷேசத்தின் இறுதிப்பகுதியை அப்படியே தருகிறோம்.


8, அப்பெண்கள் மிகவும் பயந்து குழப்பம் அடைந்தனர். அவர்கள் கல்லறையை விட்டு ஓடிப் போனார்கள். அவர்கள் அச்சத்தால் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை.
சீஷர்கள் இயேசுவைப் பார்த்தல்
(மத்தேயு 28:9- 10 யோவான் 20: 11- 18  லூக்கா 24:13- 35)
9. இயேசு வாரத்தின் முதல் நாளே உயிர்த்தெழுந்து விட்டார். முதல் நாளே இயேசு மகதலேனா மரியாளுக்கு தரிசனமானார். ஒரு முறை ஏழு பேய்களை மரியாளை விட்டு இயேசு விரட்டினார்.
10.இயேசுவைப் பார்த்த பின் மரியாள் சீஷர்களிடம் போய்ச் சொன்னாள். அச்சீஷர்கள் வெகு துக்கப்பட்டு அழுது கொண்டிருந்தனர்.
11. ஆனால் மரியாளோ, “இயேசு உயிரோடு இருக்கிறார். நான் அவரைப் பார்த்தேன்” என்றாள். ஆனால் அவர்களோ அவள் சொன்னதை நம்பவில்லை.
12.பின்னர் இயேசு, சீஷர்களில் இரண்டுபேர் நகரத்திற்கு நடந்து போய்க்கொண்டிருக்கும் போது காட்சி தந்தார். இயேசு இறப்பதற்கு முன்னர் இருந்த விதமாக  அவர் பார்ப்பதற்கு இல்லை.
13.இந்த இருவரும் போய் ஏனைய சீஷர்களிடம் கூறினர்.எனினும் அவர்களையும் அவர்கள் நம்பவில்லை.
இயேசு சீஷர்களிட‌ம் பேசுதல்
(மத்தேயு 28:16- 20  லூக்கா 26: 36- 49 யோவான் 20:19- 23  அப்போஸ்தலர் 1:6- 8)
14.பின்னர் இயேசு பதினொரு சீஷர்களுக்கும், அவர்கள் உணவு உண்ணும் தருணத்தில் காட்சியளித்தார். உயித்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமல் போனதன் நிமித்தம் அவர்களுடைய அவ நம்பிக்கையைக் குறித்தும்,  இதயக் கடினத்தைக் குறித்தும் அவர்களைக் கடிந்து கொண்டார்.
15.பின்பு அவர்களிடம், “உலகின் எல்லாப் பாகங்களுக்கும் செல்லுங்கள். எல்லோரிடமும் நற்செய்தியைக் கூறுங்கள்.
16.எவனொருவன் இதனை விசுவாசித்து ஞானஸ்நானம் பெறுகிறானோ அவன் இரட்சிக்கப்படுவான். எவனொருவன் விசுவாசிக்கவில்லையோ  அவன் கண்டிக்கப்படுவான்.
17.விசுவாசிப்பவர்கள் பல அரிய செயல்களைச் செய்யமுடியும். அவர்கள் என்பெயரால் பிசாசுகளை விரட்டுவர், அவர்கள் இதுவரை இல்லாத மொழிகளைப் பேசுவர்,
18.அவர்கள் எவ்வித துன்பமும் இல்லாமல் பாம்புகளைப் பிடிப்பர், சாவுக்குரிய நஞ்சைக் குடித்தாலும் அவர்களுக்கு ஆபத்து இல்லை, அவர்கள் தொட்டால் நோயாளிகள் குணம் பெறுவர்” என்று தம்மைப் பின்பற்றியோருக்கு கூறினார்.
19.சீஷர்களிடம் இவற்றைச் சொன்னபிறகு, இயேசு பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார். அங்கு அவர் தேவனுடைய வலது பக்கத்தில் அமர்ந்தார்.
20.அவரது சீஷர்கள் எல்லா இடங்களுக்கும் சென்று நற்செய்தியைச் சொன்னார்கள். தேவன் அவர்களுக்கு உதவினார். அவர்கள் சொல்வ‌து உண்மை என தேவன் நிரூபித்தார். சீஷர்களுக்கு அற்புதங்கள் செய்ய அதிகாரம் கொடுத்து இதை தேவன் நிரூபித்தார்.

இதுதான் மாற்கு எழுதிய சுவிஷேசத்தின் இறுதிப் பகுதி. இதில் கடைசி இரு பகுதிகளான “சீஷர்கள் இயேசுவைப் பார்த்தல்” மற்றும் “இயேசு சீஷர்களிட‌ம் பேசுதல்” என்ற பகுதிகளில் காணப்படும் 9 முதல் 20 வரையிலான பன்னிரெண்டு வசனங்களும் தான் பிற்பட்ட காலத்தில் அடையாளம் தெரியாத நபரால் எழுதப்பட்டு மாற்குவின் சுவிஷேசத்தில் சேர்க்கப்பட்டன.
இதை விரிவாக நோக்கும்முன் பைபிளின் தமிழ் மொழிபெயர்ப்பில் காணப்படும் அடிக்குறிப்பை அலசிவிடுவோம்.

நாம் மேலே குறிப்பிட்டவாறு மாற்கு எழுதிய சுவிஷேசம் எட்டாம் வசனத்துடன் முடிவடைந்து விடுகிறது. அவ்விடத்தில் ஒரு நட்சத்திர அடையாளத்தை இட்டு “சில பழைய கிரேக்க‌ பிரதிகளில் புத்தகம் இத்துடன் முடிந்துவிடுகிறது.”  என ஓர் அடிக்குறிப்பைக் கொடுத்துள்ளார்கள்.

இதன் பொருள் என்ன? “சில பழைய கிரேக்க பிரதிகளில் புத்தகம் இத்துடன் முடிந்து விடுகிறது” என்றால் வேறு “பல கிரேக்க பிரதிகளில் புத்தகம் (அதாவது மாற்கு எழுதிய சுவிஷேசம்) தொடர்கிறது” என்று தானே அர்த்தம். ஆனால் உண்மை அவ்வாறல்ல. இங்குதான் கிருஸ்துவ மத குருக்களின் மாயாஜாலங்கள் மறைந்திருக்கின்றன.

இன்றுள்ள புதிய ஏற்பாட்டின் பிரதிகளின் “தராதரம்” பற்றி நாம் ஏற்கனவே தக்க ஆதாரத்துடன் சுட்டிக் காட்டியிருந்தோம். இவ்விடத்தில் மாற்கு எழுதிய சுவிஷேசம் தொடர்பான பிரதிகளின் விபரத்தை சற்று விரிவாக  நோக்குவோம்.

1. இன்றுள்ள புதிய‌ ஏற்பாட்டுப் பிரதிகளில் மிகப் பழமையான பிரதியாக கிரேக்க மொழியில் எழுதப்பட்ட “ஸீனா” என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட கி.பி. நாலாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் எழுதப்பட்டதாக‌ நம்பப்படும் பிரதி காணப்படுகிறது.
அதில் மாற்கு எழுதிய சுவிஷேசம் 8ம் வசனத்துடன் முடிந்து விடுகிறது. (பார்க்க 4)

2. அவ்வாறே கி.பி நாலாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் எழுதப்பட்டதாக நம்பப் படும் “வத்திக்கான் பிரதி” யிலும் மாற்குவின் சுவிஷேசம் முற்றுப் பெறாமலேயே காணப்படுகிறது. (பார்க்க 5)

மேற்படி இரு பிரதிகளுமே காலத்தால் முந்தியதும் “ஓரளவு நம்பகமானதாக(?)” கருதப்படும் பிரதிகளுமாகும்.

இது அல்லாத வேறு பல பிரதிகளிலும் கூட சுவிஷேசம் முற்றுப் பெறாமலேயே முடிந்துள்ளது. உதாரணமாக பன்னிரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட “பைஸாந்த்தியப் பிரதி” ஜோர்ஜிய மொழியில் கி.பி 897 மற்றும் கி.பி 913 காலகட்டத்தில் எழுதப்பட்ட பிரதிகள் மற்றும் ஆர்மேனிய மொழியில் எழுதப்பட்ட பிரதிகள் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

இவ்வாறு மாற்கு எழுதிய சுவிஷேசம் முற்றுப் பெறாமலேயே அமைந்துள்ளது என்பதை ஆரம்பகால கிருஸ்துவ மத போதகர்கள் மற்றும் வரலாற்று ஆசிரியர்கள் கூட மாற்கு எழுதிய சுவிசேஷத்தின் முடிவுரையை அறிந்திருக்கவில்லை என்பதை வைத்தும் எம்மால் உறுதி செய்ய முடியும்.

கிலெமன்ட் ஒஃப் அலக்ஸான்டரிய்யா” மற்றும் “ஒரிஜென்” என்பவர்கள் (மாற்குவின் முடிவுரையாகிய) இவ்வசனங்கள் பற்றி அறிந்திருக்கவில்லை. மேலும் “இஸிபியூஸ்” மற்றும் “ஜிறோம்” என்ப‌வர்கள் கூட தாங்கள் அறிந்திருந்த மாற்குவின் கிரேக்கப் பிரதிகளில் இம்முடிவுரை காணப்படவில்லை என்பதை உறுதிசெய்துள்ளார்கள்” என “கிரேக்க புதிய ஏற்பாட்டின் விரிவுரை” என்ற நூலில் “புரூஸ் மெட்ஜெர்” எனும் கிருஸ்துவ மத போதகர் குறிப்பிட்டுள்ளார். (பார்க்க- 6)

இக்கருத்தையே “குர்ட் அலான்ட் மற்றும் “பர்பரா அலான்ட்” என்பவர்களும் தங்களது “புதிய ஏற்பாட்டின் மூல வாக்கியம்” என்ற நூலில் 292ம் பக்கத்தில் உறுதி செய்துள்ளனர். (பார்க்க-7)

ஆக உண்மை இவ்வாறு இருக்கும் போது மிக பிற்காலத்தில் எழுதப்பட்ட நம்பகத்தன்மையில் குறைந்த சில பிரதிகளில் யாரோ இனந்தெரியாத அநாமோதய நபர்களால் எழுதப்பட்டு மாற்கு எழுதிய சுவிஷேசத்தில் சேர்க்கப்பட்ட கைச்சரக்கையே கிருஸ்தவர்கள் இன்று வேத வசனங்களாக நம்புகிறார்கள்.

இவ்வாறு நாம் ஏலவே தெளிவுபடுத்தியது போல், ஒன்றுக்கொன்று முரணான பிற்காலத்தில் எழுதப்பட்ட நம்பகத்தன்மையில் குறைந்த சில பிரதிகளிளை மாற்குவால் எழுதப்பட்ட சுவிஷேசம் தொடர்பில் நாம் ஆய்வுக்கு உட்படுத்தினால் பல்வேறுபட்ட குழப்பங்களையும் பதில் சொல்ல முடியாத கேள்விகளையும் எதிர் கொள்ள வேண்டியுள்ளது.

அவைகளாவன:

1.ஐந்தாம் ஆறாம்  நூற்றாண்டுகளில் எழுதப்பட “அலக்ஸாந்திரியப் பிரதி” ஆறாம், ஏழாம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட ‘கிரேக்க மற்றும் இலத்தீன் பிரதிகள்’, ஒன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட “தீடா” மற்றும் “டெல்டா” பிரதிகள் போன்றவைகளில் இன்றுள்ள பைபிளில் காணப்படுவது போல் நீண்ட முடிவுரை காணப்படுகிறது.

2.ஒன்பதாம் அல்லது பத்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்டு “பரிஸ்” நகரில் இன்று வைக்கப்பட்டுள்ள, பிரதிகள் தொடர்பாக ஆய்வாளர்களால் (K) என அடையாளப்படுத்தப்படும் பிரதியில் இன்றைக்கு கிறிஸ்த்தவர்களின் கைகளில் உள்ள பைபிளில் காணப்படும் மாற்குவின் சுவிஷேசத்தில் காணப்படும் முடிவுரையை விடவும் “சுருக்கமான முடிவுரை” யையே கானப்படுகிறது.

அதன் வார்த்தைகள் “But they reported briefly to Peter and those with him all that they had been told. And after this, Jesus himself sent out by means of them, from east to west, the sacred and imperishable proclamation of eternal salvation”

“எனினும், அப்பெண்கள் பேதுருவுக்கும் அவனோடு இருந்தவர்களுக்கும், தங்களுக்கு சொல்லப்பட்டவைகளை சுருக்கமாக அறிவித்தனர். பின்னர் இயேசு அவர்களை மீட்சிக்கான நிரந்தரமும் புனிதமுமிக்க நித்திய அழைப்புடன் கிழக்கிலிருந்து மேற்குவரை அனுப்பி வைத்தார்.”

3.”சிரியப் பிரதி” மற்றும் பழைய “இலத்தீன் பிரதி” மற்றும் சில “எதியோப்பிய பிரதிகள்” என்பன நாம் ஏலவே சுட்டிக்காட்டிய “சுருக்கமான முடிவுரையையும், அதனைத் தொடர்ந்து நடைமுறையில் உள்ள மாற்குவின் சுவிஷேசத்தில் உள்ள நீண்ட முடிவுரையையும் கொண்டுள்ளன.

இவ்வியடம் முற்றுப் பெறாத மாற்கு எழுதிய சுவிஷேசத்தில் முதலில் நாம் மேலே கூறிய “சுருக்கமான முடிவுரை” சேர்க்கப்பட்டு, அதற்கு பிற்பட்ட காலத்தில்தான் இன்று பைபிளில் உள்ள “நீண்ட முடிவுரை” சேர்க்கப்பட்டது என்ற உண்மையை எமக்கு உணர்த்துகிறது.

4. பிற்காலத்தில் இலத்தீன் மொழியில் பூரணப்படுத்தப்பட்ட ” அலக்ஸாந்திரியப் பிரதியிலும்”, “அஃப்ராமிய்யாப் பிரதியிலும்”, “பீஸா பிரதியிலும்”, 15வது வசனம் வ‌ரை மாத்திரமே காணப்படுகின்றன‌.

5.”ஸுர்யானி பிரதிகளில்” 17 முதல் 20 வசனம் வரை மாத்திரம் காணப்படுகின்றன.

6.”ஹேர்குலிஸ் மற்றும் கிப்தி பிரதிகளில்” 20வது வசனம் மட்டும் காணப்படுகிறது.

7.”எதியோப்பிய மற்றும் சில கிப்தி பிரதிகளில் 12ம் வசனங்கள் வரை மட்டுமே காணப்படுகின்றன.

8.ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட “வொஷிங்டன் பிரதி”யில் இன்று காணப்படும் பைபிளில் உள்ள வசனங்களை விடவும் அதிக வசனங்கள்!! காணப்படுகின்றன. அவைகளாவன:

“And they excused them selves, saying, ‘This age of lawlessness and unbelief is under Satan, who does not allow the truth and power of God to prevail over the unclean things of the spirits [or, does not allow what lies under the unclean spirits to understand the truth and power of God]. Therefore reveal thy righteousness now — thus they spoke to Christ. And Christ replied to them, ‘The term of years of Satan’s power has been fulfilled, but other terrible things draw near. And for those who have sinned I was delivered over to death, that they may return to the truth and sin no more, in order that they may inherit the spiritual and incorruptible glory of righteousness which is in heaven.”

பின்னர் இயேசு பதினொரு சீஷர்களுக்கும், அவர்கள் உணவு உண்ணும் தருணத்தில் காட்சியளித்தார். உயித்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமல் போனதினிமித்தம் அவர்களுடைய அவநம்பிக்கையைக் குறித்தும், இதயக் கடினத்தைக் குறித்தும் அவர்களைக் கடிந்து கொண்டார். என்ற வசனத்திற்குப் பிறகு:

“ஆவிகளின் தூய்மையில்லாதவைகள் மீது உண்மையும், கர்த்தரின் அதிகாரமும் பரவி ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிக்காத, சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் உள்ள நிராகரிப்பும், அத்துமீறலும் காணப்படும் காலம் இது” (அல்லது அசுத்த ஆவிகளின் கீழுள்ளவைகளை சத்தியத்தையும், கர்தரின் வல்லமையையும் விளங்க அனுமதிக்காத சாத்தானின் ……..) எனவேதான் உமது அதீத தேவையை கர்த்தர் இப்போது வெளிக் கொணர்ந்துள்ளார்” எனக் கூறி அவர்கள் மன்னிப்பு வேண்டினர்.

இவ்வாறே, அவர்கள் இயேசுவுக்கு பதிலளித்தார்கள். அதற்கு இயேசு “சாத்தானின் ஆதிக்கம், பலத்துக்குரிய ஆண்டுகள் பூர்த்தியாகி விட்டன. எனினும் அச்சமூட்டும் பயங்கர நிகழ்வுகள் நெருங்கிவிட்டன. பாவம் செய்தவர்கள் சத்தியத்தின் பக்கம் திரும்பி மீண்டும் பாவங்களின் பக்கம் திரும்பிவிடாமல் இருக்க மரனத்தின் பால் ஒப்படைத்து விட்டேன். அவர்கள் பரலோகத்தில் என்றும் கெட்டுவிடாத உண்மையான ஆன்மீக கீர்த்தியை அநந்தரமாக அடைவார்கள்” என பதிலளித்தார்.

அதனைத் தொடர்ந்து “பின்பு அவர்களிடம், உலகின் எல்லாப் பாகங்களுக்கும் செல்லுங்கள். எல்லோரிடமும் நற்செய்தியைக் கூறுங்கள்……” என்று கிறிஸ்த்தவர்கள் மத்தியில் இன்றுள்ள மாற்குவின் சுவிஷேசத்தில் காணப்படுவது போல் வசனங்கள் தொடர்கின்றன.

மேற்கண்டவாறு மாற்குவின் சுவிஷேசத்தின் முடிவு பற்றிப் பார்த்த நாம் அதிலிருந்து பின்வரும் பெறுபேறுகளைப் பெறுகிறோம்.

1. பழைய நம்பகமான பிரதிகளில் மாற்கு எழுதிய சுவிஷேசம் முற்றுப் பெறாமலேயே முடிந்துள்ளது.

2.முற்றுப் பெறாமல் முடிவடைந்த சுவிஷேசத்தில் “சுருக்கமான முடிவுரை” ஒன்று இனந்தெரியாத யாரோ ஒருவரால் எழுதப்பட்டு சேர்க்கப்பட்டது.
3.”சுருக்கமான முடிவுரை”யில் திருப்திப்படாத வேறு யாரோ ஒருவர் இன்று நடைமுறையில் உள்ள “நீண்ட முடிவுரை” யை எழுதி மாற்குவின் சுவிஷேசத்தில் சேர்த்துவிட்டார்.

4. அந்நீண்ட விவுரையிலும் நாம் இலக்கம் 7 இல் கண்டவாறு “சில வசனங்கள் சேர்க்கப்பட்டு “மிக நீண்ட முடிவுரை” உருவாக்கப்படது. அல்லது அவ்வசனக்கள் நீக்கப்பட்டு “மிக நீண்ட முடிவுரையில்” இருந்து இன்றுள்ள “நீண்ட முடிவுரை “உருவாக்கப்பட்டது.

5. பல பிரதிகள் இன்றுள்ள “நீண்ட விரிவுரையை முழுமையாகக் கொண்டுள்ளாமல் ஒரு குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் கொண்டிருக்கின்றன.
இவ்வாறு பிரதிகள் அடிப்படையில் நோக்கும் போது முடிவுரை இன்மை, “சுருக்கமான முடிவுரை”, (இன்று நடைமுறையில் உள்ள) நீண்ட முடிவுரை, “மிக நீண்ட முடிவுரை மற்றும் அரை குறை முடிவுரைகள் என்பன பிரதிகளில் காணப்படுவதுமாற்குவின் சுவிஷேசத்தில் இன்று காண‌ப்படும் முடிவுரை மாற்குவால் தான் எழுதப்பட்டது என்ற கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை தவிடுபொடியாக தகர்த்து விடுகிறது.”

மேலும் இன்று நடைமுறையில் உள்ள பைபிள்களில் காணப்படும் மாற்கு எழுதிய சுவிஷேசத்தின் முடிவுரை மாற்குவால் எழுதப்பட்டதல்ல என்பது இன்னுமொருவகையிலும் நிரூபனமாகிறது.

மாற்கு எழுதிய சுவிஷேசம், 

8, அப்பெண்கள் மிகவும் பயந்து குழப்பம் அடைந்தனர். அவர்கள் கல்லறையை விட்டு ஓடிப் போனார்கள். அவர்கள் அச்சத்தால் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. “அப்பெண்கள் தாங்கள் பார்த்த விடயத்தை யாரிடமும் எதையும் சொல்லவில்லை” என எட்டாவது வசனம் இடை நடுவில் நிற்க (பிற்காலத்தில் முகவரி இல்லாத நபரால் எழுதி சுவிஷேசத்தில் சேர்க்கப்பட்ட 10வது வசனமோ) 10.இயேசுவைப் பார்த்த பின் மரியாள் சீஷர்களிடம் போய்ச் சொன்னாள். என முற்றிலும் முரண்பாடாக அமைந்துள்ளது.

மாத்திரமின்றி, மாற்கு எழுதிய சுவிஷேசத்தின் இறுதியில் ஏழாம் வசனத்தில் 7. இயேசு கலீலியோவுக்குப் போய்க் கொண்டிருக்கிறார். உங்களுக்கு முன்னால் அவர் அங்கிருப்பார். உங்களுக்கு ஏற்கனவே சொன்னபடி நீங்கள் அவரைப் பார்ப்பீர்கள் என்றான். என ‘இயேசுவை சீடர்கள் கலீலியோவில் பார்ப்பார்கள்’ என்று உறுதி செய்ய,   முற்றுப் பெறாத முடிவுரையை எழுதிய நபரோ  வசனம் பன்னிரெண்டில். 12. பின்னர் இயேசு, சீஷர்களில் இரண்டுபேர் நகரத்திற்கு நடந்து போய்க்கொண்டிருக்கும் போது காட்சி தந்தார். என “இயேசுவை சீடர்கள் கலீலியோவில் பார்க்கவில்லை (கலீலியோ) நகரத்திற்குச் செல்லும் வழியில் தான் பார்த்தார்கள்” என (நாலு வரிகளுக்குள்ளேயே)  முரண்பாடாக எழுதியுள்ளார்.

மேலும், மாற்குவின் சுவிஷேசத்தில் காணப்படும் விரிவான எழுத்து நடையையும் நுணுக்கமான விபரிக்கும் முறையையும் (பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட) இன்றுள்ள முடிவுரையில் நம்மால் காண முடியாமல் அவசர அவசரமாக எழுதப்பட்டு முடிக்கப்பட்ட தோரணையில் அமைந்திருப்பது இன்று பைபிளில் உள்ள மாற்குவின் முடிவுரை உண்மையில் மாற்கு எழுதியது அல்ல என்பதற்கு மிகப் பெரும் ஆதாரமாக அமைந்துள்ளது.

இதை பல‌ கிறிஸ்த்தவ அறிஞர்கள் மற்றும் மதபோதகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உதாரணமாக:

“திமோதி ஆர். கர்மோடி” எனும் கிருஸ்துவ ஆய்வாளர் தனது “மாற்கு எழுதிய சுவிஷேசம் கேள்விகளாக……” என்ற நூலின் 57வது பக்கத்தில் பின்வருமாறு கூறுகிறார்:
சட்டபூர்வமான மாற்குவின் சுவிஷேசத்தில் உள்ள 9 தொடக்கம் 20 வரையிலான வசனங்கள் சுவிஷேச ஆசிரியரால் எழுதப்படவில்லை, மாறாக அவைகள் இரண்டாம் நூர்றாண்டில் சுவிஷேசத்தில் சேர்க்கப்பட்டன என (கிருஸ்தவ) அறிஞர்கள் கருத்தொற்றுமை காண்கின்றனர்.”( பார்க்க 8)

கிருஸ்துவ மத போதகரும் பிரபல்ய விவிலிய விரிவுரையாளருமான வில்லியம் பார்க்லி என்பவர் தனது “மாற்கு எழுதிய சுவிஷேசம்” என்ற நூலின் முன்னுரையில் 17ம் பக்கத்தில் கீழ் வருமாறு கூறுகிறார்.

மாற்கு எழுதிய சுவிஷேசம் தொடர்பில் மிக சுவாரசியமான விடயம் ஒன்றுள்ளது. சுவிஷேசத்தின் மூல வடிவில் 16:8 உடன் சுவிஷேசம் நின்றுவிடுகிறது. இரு காரணங்களால் எம்மால் அதை அறிந்து கொள்ள முடியும்.

1.சுவிஷேசத்தின் (16:9-20) வரையிலான வசனங்கள் எந்த ஆரம்பகால முக்கிய பிரதிகளிலும் காணப்படவில்லை.அவை பிற்காலத்தைய மட்டமான பிரதிகளில் மட்டுமே கானப்படுகின்றன.

2. (இரண்டுக்குமிடையிலான) கிரேக்க எழுத்து முறையும் வித்தியாசமானது. சுவிஷேசத்தை எழுதிய அதே நபரால்தான் முடிவுரையும் எழுதப்பட்டது எனக் கூற முடியாத அளவுக்கு வித்தியாசமானது…..(பார்க்க 9)

இதே கருத்தை கிருஸ்துவ இணையதளமான   http://www.christian-bible.com/Dialogue/Tests/test9.htm கீழ்வருமாறு உறுதி செய்கிறது:

Which gospel talks about handling snakes?
The earliest manuscripts of the gospel of Mark do not contain Mark 16:9-20, so the reference to handling snakes in these verses are not included in many translations of the Bible. In these versions of the New Testament, Mark 16 ends with verse 8. This is a significant different, for verse 8 reports that the women who discovered the empty tomb ran away in fear and did not tell anyone what they saw. In this ancient version of the gospel of Mark there is no report of a resurrection appearance by Jesus to his disciples. Thus, it seems likely that an editor added verses 9-20 in order to link the gospel story to the beginning of the church.

 ”பாம்புகளைக் கையாள்வது பற்றிப் பேசும் சுவிஷேசம் எது?”

“மாற்கு எழுதிய சுவிஷேசத்தின் காலத்தால் மிக முந்திய பிரதிகள் 16:9-20 வரையிலான வசனங்களைக் கொண்டிருக்கவில்லை. எனவேதான் பாம்புகளைக் கையாள்வது தொடர்பான ஆதாரம் பைபிளின் அதிக மொழி பெயர்ப்புகளில் காணப்படுவதில்லை. 16:8 வது வசனமே மாற்குவின் சுவிஷேசத்தின் முடிவாகும். அவ்வசனம் “கல்லறையை வெறுமையாகக் கண்ட பெண் அச்சத்தால் விரைந்தோடினாள். தான் கண்டதை யாருக்கும் சொல்லவில்லை” எனக் கூறுகிறது. மாற்கு சுவிஷேசத்தின் பழைய பிரதியில் “இயேசு உயித்தெழுந்ததும், தனது சீடர்களுக்குத் தரிசனம் கொடுத்தார்” என்ற செய்தி கிடையாது. எனவே, சுவிஷேசத்தின் கதையை திருச்சபையுடன் தொடர்புபடுத்த வேண்டி இன்றுள்ள முடிவுரையை யாரோ சுவிஷேசத்தில் சேர்த்து விட்டார் எனத் தோன்றுகிறது.

சுருங்கக் கூறின் கிருஸ்தவர்களால் மாற்கு எழுதிய சுவிஷேசம் என நம்பப் படும் சுவிஷேசத்தின் இன்றுள்ள முடிவுரை உண்மையில் மாற்குவினால் எழுதப்பட்டது அல்ல. மாறாக, அவை பிற்பட்ட காலத்தில் வாழ்ந்த பெயர், முகவரி தொரியாத அநாமோதய நபரின் சொந்த கற்பனையேஎன்பதை  (1) பிரதிகளை ஒப்பு நோக்கியும் (2) ஆரம்ப கால கிருஸ்துவ மதகுருக்கள் மற்றும் வரலாற்று ஆசிரியர்கள் இன்றுள்ள முடிவுரை பற்றி அறிந்திருக்கவில்லை என்பதைக் கொண்டும் (3) முற்பகுதிக்கும் முடிவுரைக்கும் மத்தியில் காணப்படும் முரண்பாடுகளைக் கொண்டும் (4) இருப‌குதிகளுக்குடையிலான வசன நடை வித்தியாசத்தைக் கொண்டும் (5) இறுதியாக கிருஸ்துவ அறிஞர்கள் ஆய்வாளர்கள் மற்றும் மத போதகர்களின் கூற்றுகளைக் கொண்டும் தக்க சான்றுகளுடன் நிரூபித்துள்ளோம்.

இது தொடர்பில் யாராவது மாற்றுக் கருத்துகளையோ, எதிர்வாதங்களையோ முன்வைத்தால் அவைகளை பரிசீலித்து அறிவுபூர்வமாகவும், ஆதாரங்கள் அடிப்படையிலும் பதில் தருவோம் எனவும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இறுதியாக, மாற்கு எழுதிய சுவிஷேசத்தில் எவ்வாறு அநாமோதய நபரின் சொந்த கற்பனை சேர்க்கப்பட்டது என்பதை அறிந்த நாம் மாற்கு எழுதிய சுவிஷேசத்தின் ஒரு பகுதி எவ்வாறு நீக்கப்பட்டது என்ற திடுக்கிட வைக்கும் உண்மையையும் “மாற்கு எழுதிய மர்ம சுவிஷேசம்” என்ற தலைப்பில் தக்க சான்றுகளுடன் இன்ஷா அல்லாஹ் இன்னுமொரு கட்டுரையில் நோக்குவோம்.

“தங்களது கரங்களால் நூலை எழுதி பின்பு அற்ப இலாபத்தை அடைய இது கர்த்தரிடம் இருந்து வந்தது எனக் கூறுவோருக்கு சாபம் உண்டாகட்டும்!! அவர்கள் கரங்களால் எழுதியவைகளுக்கும் (அதைக் கொண்டு) சம்பாதித்தவைகளுக்கும் சாபம் உண்டாகட்டும்”  (அல் குர் ஆன் 2:79)


துணை நின்றவை………..
(1)
dsc034121
10 MISQUOTING JESUS
maybe I don’t need to come up with a fancy explanation for how the mustard seed is the smallest of all seeds when I know full well it isn’t. And maybe these “mistakes” apply to bigger issues. Maybe when Mark says that Jesus was crucified the day after the Passover meal was eaten (Mark 14:12; 15:25) and John says he died the day before it was eaten (John 19:14)—maybe that is a genuine difference. Or when Luke indicates in his account of Jesus’s birth that Joseph and Mary returned to Nazareth just over a month after they had come to Bethlehem (and performed the rites of purification; Luke 2:39), whereas Matthew indicates they instead fled to Egypt (Matt. 2:1922)— Maybe that is a difference. Or when Paul says that after he converted on the way to Damascus he did not go to Jerusalem to see those who were apostles before him (Gal. 1:1617), whereas the book of Acts says that that was the first thing he did after leaving Damascus (Acts 9:26)— maybe that is a difference.
This kind of realization coincided with the problems I was encountering the more closely I studied the surviving Greek manuscripts of the New Testament. It is one thing to say that the originals were inspired, but the reality is that we don’t have the originals—so saying they were inspired doesn’t help me much, unless I can reconstruct the originals. Moreover, the vast majority of Christians for the entire history of the church have not had access to the originals, making
their inspiration something of a moot point. Not only do we not have the originals, we don’t have the first copies of the originals. We don’t even have copies of the copies of the originals, or copies of the copies of the copies of the originals. What we have are copies made later—much later. In most instances, they are copies made many centuries later. And these copies all differ from one another, in many thousands of places. As we will see later in this book, these copies differ
from one another in so many places that we don’t even know how many differences there are. Possibly it is easiest to put it in comparative terms: there are more differences among our manuscripts than there are words in the New Testament. Most of these differences are completely immaterial and insignificant.
A good portion of them simply show us that scribes in antiquity.
(2)
dsc034121
dsc034121
dsc034121
(3)
dsc034121
dsc034121
(4)
dsc034121
(5)
dsc034121
(6)
dsc034121
(7)
dsc034121
dsc034121
(8)
dsc034121
dsc034121
(9)
dsc034121
dsc034121

0 Comments:

Post a Comment