Site Network: Home | Blogcrowds | Gecko and Fly | About



abuzaidalathary@gmail.com

உலகிலுள்ள கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையானோர் இன்று நடைமுறையில் உள்ள‌ பைபிளை இறைவேதமாக நம்புகின்றனர். குறிப்பாக இயேசு கிறிஸ்துவின் வாழ்வு பற்றி பேசும் மத்தேயு, மாற்கு, லூக்கா, மற்றும் யோவான் என்போரால் எழுதப்பட்ட நான்கு சுவிசேஷங்களும், இயேசுவின் சீடர்களால்  “பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டு” எழுதப்பட்டன என்றும் அவைகளில் கூட்டல், குறைத்தல், திருத்தல், மறைத்தல் எதுவும் செய்யப்பட்வில்லை எனவும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளனர். இந் நம்பிக்கை முற்றிலும் தவறானது என  தமிழ் பேசும் மக்கள் மத்தியில் தக்க சான்றுகளுடன்  நிரூபிக்கும் நாம் இது பற்றிய தங்களது அபிப்பிராயங்களையும் ஆலோசனைகளையும் பெரிதும் வரவேற்கிறோம்.

“மாற்கு எழுதிய மர்மச் சுவிஷேசம்” எனும் இக்கட்டுரையின்  மையப்பகுதிக்குள் செல்லுமுன்  இது  தொடர்பான  நான்கு  முக்கிய  பின்னணிகளை, பின்புலங்களை அறிந்து கொள்வது  அவசியமாகும்.

1. அதிசயம் நிகழ்ந்தது…..

பேராசிரியர் “மோர்ட்டன் ஸ்மித்” (Morton Smith) அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் “புராதன வரலாறு” துறையில் பணியாற்றியவர். கி.பி 1940 காலப்பகுதியில் ஜெரூஸலம் நகரில் இருந்து 12 மைல் தொலைவில்  தென் கிழக்குப் பகுதியில் “மார் ஸபா”   எனும் இடத்தில் அமைந்துள்ள கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வரலாற்று க்கியத்துவம் வாய்ந்த கிறிஸ்துவ ‘ஓர்தொடெக்ஸ்  மடாலயம்’ ஒன்றுக்கு விஜயம் செய்தார். அங்கு இரு மாத காலம் தங்கியிருந்து அங்கிருந்த துறவிகளுடன் சேர்ந்து அவர்களது நாளாந்தப் பணிகளில் பங்கேற்றார். பின்பு மீண்டும் கி.பி 1958 ம் ஆண்டு குறித்த மடாலயத்திற்கு விஜயம் செய்து தனது ஓய்வு நேரங்களில் அங்கு காணப்பட்ட பண்டைய கிரேக்க மொழியில் அமைந்த தொன்மையான வரலாற்று ஆவணங்கள், கையெழுத்துப் பிரதிகளுக்கான “அட்டவணை” (Catalogue) ஒன்றைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.



dsc034121

இவ்வாறு பேராசிரியர் பழங்கால ஆவணங்களை தூசு தட்டி அவைகளுக்கான  
“அட்டவணை” (Catalogue) தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு,  17 ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு நூலை பரிசோதித்துக் கொண்டிருந்த போதுதான் கிறிஸ்துவர்களது நம்பிக்கையின் அஸ்த்திவாரத்தையே ஆட்டங்காணச்   செய்த‌   அதிசயம்   நிகழ்ந்தது……. (பார்க்க 1)

2. கிளமென்ட் ஓஃப் அலக்ஸாந்தரிய்யா:

dsc034121 
Clement of Alexandria


‘கிளெமென்ட் ஓஃப் அலக்ஸந்தரிய்யா’ (Clement of Alexandria) என்பவர் கிறிஸ்துவ மதத்திலும், கிறிஸ்துவ சமுதாயத்திலும் மிக முக்கியமானவராகக் கருதப்படுகிறார். “கிறிஸ்துவ இறையியல் தத்துவத்தின் தந்தை” என இவரை கிறிஸ்துவர்கள் அடையாளப்படுத்துவர்.

கிறிஸ்துவ வரலாற்றை முதன் முதலில் பதிவு செய்த “யூஸாபியூஸ்” என்பவர் ‘கிளெமென்ட்’ அவர்களை “விவிலிய நூற்களில் நன்கு புலமை பெற்றவர்” என வர்ணித்துள்ளார். அவ்வாறே கிளெமென்ட் அவர்கள் அறிவு தேடுவதில் அடங்காத ஆர்வம் கொண்டவர் எனவும் கிரேக்க வரலாற்றில் மிக நிபுணத்துவம் பெற்றவர் எனவும் மத போதகர் ‘கிறீலஸ்’ என்பவர் சான்று பகர்ந்துள்ளார்.

“எங்களில் அதிக அறிவுடையவராக கிளெமென்ட் திகழ்ந்தார்” என அக்கால மத குரு “ஜீரோம்” குறிப்பிட ‘சாக்ரடீஸ்’ அவர்களோ “கிளெமென்ட் அனைத்து அறிவும் நிரம்பப் பெற்றவர்” என சிலாகித்துக் கூறியுள்ளார்.

“டி தியுஸ் ப்ளாவியுஸ் கிளெமென்ஸ்” எனும் இயற்பெயரை உடைய கிளெமென்ட் அவர்கள் கி.பி. சுமார் 150ம் ஆண்டளவில் சிலை வணங்கிகளான பெற்றோருக்குப் பிறந்தார்.  கிளெமென்ட் அவர்களை வரலாற்றாசிரியர்கள் சிலர் அலக்ஸாந்தரிய்யாவில் பிறந்தார் எனக் குறிப்பிட, வேறு சிலரோ “ஏதென்ஸ்” நகரில் பிறந்தார் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

‘கிளெமென்ட்’ அவர்கள் எப்போது சிலை வணக்கத்தைக் கைவிட்டு கிறிஸ்தவத்தை தழுவினார் என்ற விபரங்கள் எதுவும் வரலாற்றில் பதிவு செய்யப்படவில்லை.

எனினும், பண்பாட்டு ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் ‘கிளெமென்ட்’ சிறந்து விளங்கினார். தென் இத்தாலி, சிரியா, பலஸ்தீன் ஆகிய பகுதிகளுக்குப் பயணம் செய்து அங்கு கிறிஸ்துவப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கிளெமென்ட், அக்காலத்தில் காணப்பட்ட வழிதவறிய கிறிஸ்த்தவ மதப் பிரிவுகளுக்கெதிராக தன‌து எழுத்தாலும், பேச்சாலும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார் எனவும் இறுதியில் அலக்ஸாந்தரிய்யா நகரில் தங்கியிருந்தார் என்ற விபரங்களையும் வரலாற்றில் நாம் காணக்கூடியதாக உள்ளது.


அலக்ஸாந்தரிய்யா மதபீடத்தின் தலைவர் “பந்தினூஸ்” என்பவரிடம் கல்வி கற்ற கிளெமென்ட் “பந்தினூஸ்” கி.பி.190ம் ஆண்டளவில் இந்தியா பயணமாகும் வரை அவருக்கு உதவியாளராகவும், பின்பு மதபீடத்தின் தலைவராகவும் பதவிவகித்தார்.

கி.பி 202ம் ஆண்டளவில் “செப்திமோஸ் ஸுவைரஸ்” என்ற ஆட்சியாளனின் அடக்கு முறைக்குப் பயந்து ‘அந்தாக்கியா’ சென்ற கிளெமென்ட் கி.பி 215ம் ஆண்டளவில் மரணித்தார்.

‘கிளெமென்ட்’ எழுதிய நூற்களுள் முக்கியமானதாக பின்வரும் மூன்று நூற்களை குறிப்பிடலாம்.

1. Protrepticus  -  “உபதேசம்”
2 .Paedagogas   -   “ஆசான்”
3 .Stromata    -  “கதம்பங்கள்”

நாம் மேலே சுருக்கமாக தந்திருக்கும் தகவல்கள் விரிவாக “ஹென்னி பிஸ்கா” என்பவர் எழுதிய “கிளெமென்ட் ஓஃப் அலக்ஸாந்தரிய்யாவும் எதிர்மறை இறையியலின்  ஆரம்பமும்” என்ற நூலில் 57ம் பக்கம் முதல் 70ம் பக்கம் வரை விரிவாகக் கூறப்பட்டுள்ளது. (பார்க்க 2)

3. கர்போக்ரடியர்கள்:

பெரும்பான்மை கிறிஸ்தவ சமுதாயத்தில் இருந்து ஆரம்பகாலத்தில் பிரிந்து சென்ற ஒரு நெறி பிறழ்ந்த பிரிவாக “கனூஸிய்யர்கள்” அடையாளங் காணப்படுகிறார்கள். கி.பி 130‍ முதல் கி.பி 150 வரையிலான காலப்பகுதியில் கனூஸிய்யர்களில் தோன்றிய உட்பிரிவு ஒன்றே “கர்போக்ரடியர்கள்” என அழைக்கப்பட்டனர்.

இயேசு கிறிஸ்து ‘கடவுளோ, கடவுளின் குமாரனோ அல்ல’ என்றும் அவர் ஞானம் பெற்றவர்களில் ஒருவர் என்றும் நம்பிய இப்பிரிவினர் தங்களுக்கிடையில் காணப்பட்ட ‘மனைவியர்’ உட்பட  சகல சொத்துகளையும் சகலருக்கும் பொதுவான(?) உடமையாகக் கருதி வந்தனர் என்ற தகவலை கொலம்பியா கலைக் களஞ்சியத்தின் ஆறாம் பதிப்பு உறுதி செய்கிறது. (பார்க்க 3)

மேலும் இப்பிரிவினர் பாலியல் நடவடிக்கைகளூடாக நித்திய ஜீவனை அடைய முடியும்(?) என நம்பினார்கள் என்பதையும் அதற்காக வேண்டி பைபிளில் இருந்தே ஆதாரங்கள் காட்டினார்கள் என்பதையும் நாம் சற்றுப் பின்னால் நோக்க இருக்கிறோம்.

4. மாற்கு எழுதிய சுவிஷேசமும் மறைக்கப்பட்ட வசனங்களும்:

இயேசு கிறிஸ்துவின் வாழ்வு பற்றி எடுத்துக்கூறும் நான்கு சுவிஷேசங்களை, குறிப்பாக மாற்கு எழுதிய இன்றைய நடைமுறையில் உள்ள சுவிஷேத்தை காய்தல், உவத்தல் இன்றி நடுநிலையுடன் கருத்தூன்றி வாசிப்பவர்கள் எவரும் சில இடங்களில் சம்பவத் தொடர்புகள் இன்மையையும், வசனங்கள் சில நீக்கப்பட்டிருப்பதையும் இலகுவாக கண்டுகொள்ளலாம். உதாரணமாக மாற்கு 10:46 வசனத்தை கவனியுங்கள்!! அது பின்வருமாறு அமைந்துள்ளது.

மாற்கு 10:46. பின்பு, அவர்கள் எரிகோவுக்கு வந்தார்கள். அவரும் அவருடைய சீஷர்களும் திரளான ஜனங்களும் எரிகோவைவிட்டுப் புறப்படுகிறபோது, திமேயுவின் மகனாகிய பர்திமேயு என்கிற ஒரு குருடன், வழியருகே உட்கார்ந்து, பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.

எரிக்கோவுக்கு இயேசுவும் அவரோடிருந்த மக்களும் வந்தார்கள் என ஆரம்பித்த வசனம் எரிகோவில் இயேசு யார் யாரை சந்தித்தார்? என்னென்ன உபதேசங்கள் செய்தார்? எந்தெந்த அற்புதங்கள் செய்தார்? சாதாரணமாக அவரோடு வந்த “அவர்கள்” திரும்பிப்போகும் போது எப்படி “சீஷர்கள்” ஆனார்கள்? திரளான ஜனங்கள் அவருடன் எரிகோவை விட்டு வெளியேறும் அளவிற்கு அங்கு என்ன நடந்தது? அப்படி எதுவும் எரிகோவில் நடைபெறவில்லையானால் மாற்கு ஏன் இயேசுவின் எரிகோ வருகையை முக்கியத்துவம் கொடுத்து தனது சுவிஷேசத்தில் பதிவு செய்ய வேண்டும்? என்ற அடுக்கடுக்கான கேள்விகள் அனைத்துக்குமான ஒரே பதில் எரிகோவில் நடைபெற்ற சம்பவங்கள் “கவனமாக மறைக்கப் பட்டுவிட்டன” என்பதை தவிர வேறில்லை!

அதே போன்று மாற்கு 14:50,51,52,53 வசனங்களை பாருங்கள்! இயேசு “கெத்சமனே” என்ற தோட்டத்தில் கைது செய்யப்பட்ட போது நடந்த மர்மமான சம்பவத்தை இவ்வாறு விபரிக்கிறது!

மாற்கு:14
50.அப்பொழுது எல்லாரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள்.
51.ஒரு வாலிபன் ஒரு துப்பட்டியை மாத்திரம் தன்மேல் போர்த்துக்கொண்டு அவர் பின்னே போனான்; அவனைப் பிடித்தார்கள்.
52. அவன் தன் துப்பட்டியைப் போட்டுவிட்டு, நிர்வாணமாய் அவர்களை விட்டு ஓடிப்போனான்.
53.இயேசுவை அவர்கள் பிரதான ஆசாரியனிடத்தில் கொண்டுபோனார்கள்;  அங்கே ஆசாரியர், மூப்பர், வேதபாரகர் எல்லாரும் கூடிவந்திருந்தார்கள்.

இயேசுவை படையினர் கைது செய்த போது ‘சீஷர்கள்’ எல்லோரும் ஓடிப்போய்விட, தனது ‘நிர்வாண மேனியின்’ மேல் துப்பட்டியை மாத்திரம் போர்த்திக் கொண்டு  இயேசுவைப் பின் தொடர்ந்த “ஒரு வாலிபன்” யார்? இயேசுவைப் பின் தொடர்ந்த அந்த “மர்ம வாலிபன்” பற்றி விவரங்கள் வேறு எந்த இடத்திலும் சுவிஷேசங்களில் கூறப்படாதது ஏன்? “கெத்சமனே” தோட்டத்தில் அவ்வாலிபன் இயேசுவுடன் என்ன செய்து கொண்டிருந்தான்? சீடர்களை எல்லாம் தப்புவதற்கு விட்டு விட்ட ரோம சாம்ராஜ்யத்தின் வலிமை மிகு படைவீரர்கள்(?) இயேசுவோடு சேர்த்து அவ்வாலிபனை மாத்திரம் ஏன் பிடிக்க முயற்சித்தனர்? என்பது போன்ற கேள்விகளுக்கு இரு நூற்றாண்டுகளாக மூளையைக் கசக்கிப் பிழிந்து பதில்காண முற்பட்ட விவிலிய விரிவுரையாளர்களால் எந்தவொரு ஏற்றுக் கொள்ளக் கூடிய, திருப்திகரமான பதில்களையும் வழங்க முடியவில்லை என்பதும் சம்பவத்துடன் தொடர்பான வசனங்கள் சில மாற்குவின் சுவிஷேசத்தில்  இருந்து நீக்கப்பட்டு விட்டன என்பதையே உறுதி செய்கிறது.

இவ்விபரங்களை கிருஸ்துவ மதத்தைச் சார்ந்த விவிலிய ஆராய்சியாளர் “பார்த் டி எர்மான்” என்பவர் தனது “LOST CHRISTIANITIES”   “தொலைந்து போன கிருஸ்தவம்” என்ற நூலில் 79ம் 80ம் பக்கங்களில் தெளிவுபடுத்தியுள்ளார். (பார்க்க 4)

இந்நான்கு பின்னணிகளை, பின்புலங்களை நோக்கிய நாம் இனி கட்டுரையின் மையப்பகுதிக்குள் செல்வோம்.

மோர்டன் கண்டெடுத்த கடிதம்:

மோர்டன் ஸ்மித் “மார் ஸபா” மடாலயத்தில் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த நூலை ஆய்வு செய்து கொண்டிருந்த போது ‘கிளெமென்ட் ஓஃப் அலக்ஸாந்தரிய்யா என்பவர் தனது நண்பர் ஒருவருக்கு எழுதிய பதில் கடிதத்தின் பிற்கால பிரதி ஒன்றைக் கண்டெடுத்தார். அப்பிரதிதான் பைபிள் தொடர்பான கிருஸ்தவர்களது நம்பிக்கையை தலைகீழாகப் புரட்டிப் போட்டது.!!  (பார்க்க 5)

‘மோர்டன்’ கண்டெடுத்த ‘கிளெமென்டின்’ கடிதத்தின் ஆங்கில மொழிபெயர்பையும் அதன் த‌மிழாக்கத்தையும் பார்த்து விடுவோம்.

To Theodore.
You did well in silencing the unspeakable teachings of the Carpocrations. For these are “wandering stars” referred to in the prophecy, who wander from the narrow road of the commandments into a boundless abyss of the carnal and bodily sins. For, priding themselves in knowledge, as they say, “of the deep things of Satan, they do not know that they are casting themselves away into “the netherworld of the darkness” of falseness, and boasting that they are free, they have become slaves of servile desires. Such men are to be opposed in all ways and alltogether. For, even if they should say something true, one who loves the truth should not, even so, agree with them. For not all true things are the truth, nor should that truth which merely seems true according to human opinions be prefered to the true truth, that according to the faith.
Now of the things they keep saying about the divinely inspired Gospel according to Mark, some are altogether falsifications, and others, even if they do contain some true elements, nevertheless are not reported truely. For the true things being mixed with inventions, are falsified , so that, as the saying goes, even the salt loses its savor.

As for Mark, then, during Peter`s stay in Rome he wrote an account of the Lord`s doings, not, however, declaring all of them, nor yet hinting at the secret ones, but selecting what he thought most useful for increasing the faith of those who were being instructed. But when Peter died a martyr, Mark came over to Alexandria, bringing both his own notes and those of Peter, from which he transferred to his former books the things suitable to whatever makes for progress toward knowledge. Thus he composed a more spiritual Gospel for the use of those who were being perfected. Nevertheless, he yet did not divulge the things not to be uttered, nor did he write down the hierophantic teaching of the Lord, but to the stories already written he added yet others and, moreover, brought in certain sayings of which he knew the interpretation would, as a mystagogue , lead the hearers into the innermost sanctuary of truth hidden by seven veils. Thus, in sum, he prepared matters, neither grudgingly nor incautionously, in my opinion, and, dying, he left his composition to the church in 1, verso Alexandria, where it even yet is most carefully guarded, being read only to those who are being initated into the great mysteries.

But since the foul demons are always devising destruction for the race of men, Carpocrates, instructed by them and using deceitful arts, so enslaved a certain presbyter of the church in Alexandria that he got from him a copy of the secret Gospel, which he both interpreted according to his blasphemous and carnal doctrine and, moreover, polluted, mixing with the spotless and holy words utterly shameless lies. From this mixture is withdrawn off the teaching of the Carpocratians.

To them, therefore, as I said above, one must never give way ; nor, when they put forward their falsifications, should one concede that the secret Gospel is by Mark, but should even deny it on oath. For, “For not all true things are to be said to all men”. For this reason the Wisdom of God, through Solomon, advises, “Answer the fool with his folly,” , teaching that the light of the truth should be hidden from those who are mentally blind. Again it says, “From him who has not shall be taken away” and “Let the fool walk in darkness”. But we are “children of Light” having been illuminated by “the dayspring” of the spirit of the Lord “from on high”, and “Where the Spirit of the Lord is” , it says, “there is liberty”, for “All things are pure to the pure”.

To you, therefore, I shall not hesitate to answer the questions you have asked, refuting the falsifications by the very words of the Gospel. For example, after “And they were in the road going up to Jerusalem” and what follows, until “After three days he shall arise”, the secret Gospel brings the following material word for word:
“And they came into Bethany and a certain woman whose brother had died was there. And, coming, she knelt down before Jesus and said to him, “Son of David, have mercy on me”. But the disciples rebuked her. And Jesus got angry with them and went off with her into the garden where the tomb was. Right away there was a loud cry from inside the tomb. Then Jesus rolled away the stone from in front of the tomb. He went in where the youth was and stretched forth his hand and raised him up. The youth, looking upon him, loved him and began to beg him to be with him. They they left the tomb and went to the young man’s house, for he was rich. Six days later, Jesus gave him instructions of what to do and in the evening the youth came to him, wearing nothing but a linen cloth over his naked body. He remained with him that night, for Jesus thaught him the mystery of the Kingdom of God. And when Jesus woke up, he returned to the other side of the Jordan.”
And these words follow the text, “And James and John come to him” and all that section. But “naked man with naked man” and the other things about which you wrote, are not found.
And after the words,”And he comes into Jericho,” the secret Gospel adds only, “And the sister of the young man whom Jesus loved was there, along with his mother and Salome, but Jesus did not receive them.” But many other things about which you wrote both seem to be and are falsifications.

தியோதருக்கு…..
கர்போக்ரடியர்களது தரங்கெட்ட போதனைகளை வாய் மூடச்செய்ததின் மூலம் நல்ல காரியத்தைச் செய்துள்ளீர்கள். ஏனெனில், அவர்கள் தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்டது போல் “வழிதவறிய நட்சத்திரங்களைப்” போன்றவர்கள். நல்லுபதேசங்களுக்காக வரையறை செய்யப்பட்ட பாதையை விட்டும், வரையறையில்லாத சரீரப் பாவங்கள் எனும் படுகுழியை நோக்கியே செல்கின்றனர்.

சாத்தானின் ஆழ்ந்த விடயங்களில் ‘இறை ஞானம்’ எனத் தம்பட்டம் அடித்துக் கொண்டே போலியான ‘ஜடங்களின் இருண்ட உலகை’ நோக்கிப் பயணப்படுகிறார்கள் என்பதை அவர்கள் அறியாமல் இருக்கிறார்கள். தங்களை சுதந்திரமானவர்கள் என அழைத்துக்கொண்டே உடலிச்சைகளுக்கு, கேவலமான அடிமைகளாகப் போய்விட்டனர். இவ்வாறானவர்களை பலவழிகளிலும் நாம் அனைவரும் எதிர்த்துப் போராடுவது அவசியமாகும்.

அவர்கள் சரியான விடயமொன்றைக் கூறினாலும் கூட சத்தியத்தை விரும்புபவர்கள் அவர்களுடன் கருத்துடண்பாடு காணாமல் இருப்பது அவசியமாகும். ஏனெனில், சரியான விடயங்கள் அனைத்தும் சத்தியம் அல்ல. ஒரு மனிதனுக்கு சத்தியமாக தோன்றும் விடயத்தை,  நம்பிக்கை பிரகாரம் சத்தியமாக உள்ள விடயத்தை விடவும் சிறந்தது எனக் கருதக்கூடாது. ஏனெனில் சத்தியங்கள் போலியான விடயங்களுடன் கலப்படம் செய்யப்பட்டு – “உப்பு அதன் உவர்ப்பை இழந்துவிட்டது” என்ற பழமொழிக்கு ஒப்ப- தவறான முறையில் முன்வைக்கப்பட்டு விட்டது.

மாற்குவினைப் பொருத்தவரை (இயேசுவின் சீடர்) பேதுரு (பீட்டர்) ரோமில் தங்கியிருந்த போது, இயேசுவின் செயல்கள் பற்றி எழுதினார். எனினும், இயேசுவின் அனைத்து செயல்களையும் எழுதவில்லை. இயேசுவின் இரகசிய செயற்பாடுகள் பற்றியும் சுட்டிக்காட்டவில்லை. மாறாக, தான் கற்பித்தவர்களது விசுவாசத்தை அதிகப்படுத்துவதில் பலனளிக்கும் என தான் கருதியவைகளை மாத்திரம் தேர்ந்தெடுத்து எழுதினார். ஆனால், பேதுரு கொல்லப்பட்ட பின் தான் எழுதியவைகளையும், பேதுருவிடம் இருந்து கேட்ட போதனைகளையும் அலக்ஸாந்தரிய்யாவுக்கு கொண்டு வந்தார். அங்கு கூடுதல் ‘இறை ஞானத்தை’ பெற பொருத்தமானவைகளை தனது நூலில் சேர்த்து எழுதினார்.

இவ்வாறு மாற்கு ஆன்மீக போதனைகள் அதிகம் நிறைந்த தனது சுவிஷேசத்தை எழுதினாலும் கூட இரகசிய போதனைகளை அவர் எழுதவில்லை. ஏற்கனவே எழுதிய விடயங்களுடன் வேறு சில விடயங்களை அதிகரித்து எழுதினார். அத்துடன் மதத் தலைவர் என்ற வகையில் ஏழு திரைகளுக்குப் பின்னால் மறைக்கப்பட்டுள்ள இரகசிய போதனைகளை அறிந்து கொள்ளக் கூடிய விளக்கங்களைக்  கொண்ட வரையறுக்கப்பட்ட சில வார்த்தைகளை அதனுடன் சேர்த்திருந்தார்.

சுருங்கக் கூறின், எனது அபிப்பிராயப்படி எந்த சூழ்ச்சியோ, எச்சரிக்கையோ இன்றி சில விடயங்களை இவ்வாறுதான் சேர்த்திருந்தார்.

மாற்கு மரணிக்கும் போது, தான் எழுதியவைகளை அலக்ஸாந்தரிய்யா தேவாலயத்தில் விட்டுச் சென்றார். அவைகள் அங்கு மிகக் கவனமாக பாதுகாக்கப்பட்டு மிகப்பெரும் இரகசியங்களை அறிந்தவர்களுக்கு மட்டும் போதிக்கப்பட்டு வருகின்றன.

எனினும், தீய ஆவிகள் மனித குலத்தை நாசம் செய்யும் வகையிலேயே திட்டமிட்டு வருகின்றன என்ற வகையில் ‘கர்போக்ரடியர்கள்’ அத்தீய ஆவிகளிடம் இருந்து கற்ற‌ ஏமாற்றும் கலைகளை பயன்படுத்தி, அலக்ஸாந்தரிய்யா தேவாலயத்தில் இருந்த மூத்த மதகுரு ஒருவரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அவரிடமிருந்து மர்மச் சுவிசேஷத்தின் ஒரு பகுதியின் பிரதியைப் பெற்றுக் கொண்டார்கள். அதற்கு தங்களது உட‌லிச்சையும், நிராகரிப்பும் நிறைந்த நம்பிக்கைக் கோட்பாட்டுக்கு ஒப்ப விளக்கமளித்தனர். அதையும் தாண்டி தூய்மையான புனித வார்த்தைகளுடன், இழிவான பொய்களையும் கலந்து விட்டனர். இவ்வாறு கலப்படம் செய்யப்பட்ட ஒன்றில் இருந்துதான் தங்களது கர்போக்ரடிய போதனைகளை கொண்டுவந்தனர்.

இவர்களைப் பொறுத்த வரைக்கும் நான் ஏற்கனவே கூறியது போல், இவர்கள் தங்களது போலி (ஆதாரங்)களை முன்வைத்தாலும் இவர்களுக்கு நாம் (ஒரு போதும்) இடமளிக்கக் கூடாது. மாற்கு அவரது மர்மச் சுவிஷேசத்தை எழுதினார் என்பதை நாம் ஏற்றுக் கொள்ளக் கூடாது, சத்தியம் செய்தாவது அதை நாம் மறுத்துவிட வேண்டும். காரணம் “அனைத்து உண்மைகளும் அனைவருக்கும் சொல்லப்படுவது தகுமானதல்ல. இதன் காரணமாகவே சாலமோனின் நீதி மொழியில் “முட்டாளுக்கு அவனது முட்டாள்தனத்தைக் கொண்டே பதிலளி” எனக் கூறப்பட்டுள்ளது. சத்திய ஒளி அறிவுக் குருடர்களுக்கு மறைக்கப்பட வேண்டும்.

மேலும் கர்த்தரின் நீதி “அதிலிருந்து நீர் வெகு தூரத்துக்கு எடுத்துச் செல்லப்படமாட்டீர்” எனவும், “மூடனை இருளிலேயே நடக்க விட்டுவிடு” எனவும் அமைந்துள்ளது.

ஆனால், நாமோ ஒளியின் புத்திரர்களாக உள்ளோம். கர்த்தரின் ஜீவனும் (வரையறையற்ற) சுதந்திரமும் கொண்ட  பரலோகத்தில் உள்ள கர்த்தரின் ஆவியின் வைகறை ஒளியால் ஒளியூட்டப்பட்டுள்ளோம். ஏனெனில் “தூய்மையானவனுக்கு அனைத்து விடயங்களும் தூய்மையானதுதான்”.

எனவே, தியோதரே சுவிஷேசம் தொடர்பான பொய்களைக் களையும் நிமித்தம் நீர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க நான் தயக்கம் கொள்ளவில்லை.

உதாரணமாக (மாற்கு 10:32) “அவர்கள் ஜெருஸலமுக்குப் போகும் பாதையில் சென்று கொண்டிருந்த போது” என்ற வசனத்திற்குப் பின் (மாற்கு 10:34 ) “மூன்று நாட்களுக்குப் பின்பு அவர் எழுவார்” என்ற வார்த்தைக்குப் பின் மர்மச் சுவிஷேசத்தில் பின்வரும் பந்தி(கள்) அப்படியே காணப்படுகிறது.

அவர்கள் பெத்தேஹானி என்ற ஊருக்குச் சென்றார்கள். அங்கே தனது சகோதரன் மரணித்து விட்ட ஒரு பெண் இருந்தாள். அவள் இயேசுவிடம் வந்து அவருக்கு சிரம்பணிந்து. ‘தாவீதின் குமாரனே! என் மீது இரக்கங்காட்டும்’ என்றாள். .அப்போது சீஷர்கள் அப்பெண்ணை விரட்ட எத்தனித்தனர். அதனால் இயேசு அவர்கள் மேல் கோபம் கொண்டு அப்பெண்ணுடன் கல்லறை இருந்த தோட்டத்திற்குச் சென்றார். அவ்வேளையில் இயேசு கல்லறையில் இருந்து வந்த உரத்த குரலிலான அழுகை சத்தத்தைக் கேட்டார்.

இயேசு அக்கல்லறையின் முன்பக்கமிருந்த பாறையை உருட்டிவிட்டார். வாலிபன் இருந்த இடத்திற்கு சென்று இரு கரங்களையும் நீட்டி அவனை உயிப்பித்தார். அவ் வாலிபன் இயேசுவைப் பார்த்ததும் அவர் மீது விருப்பம் கொண்டு தன்னோடு தங்கிருக்கும் படி கெஞ்சிக் கேட்டுக் கொண்டான். அவர்கள் கல்லறையில் இருந்து வெளியே வந்து அவ்வாலிபனின் வீட்டிற்குச் சென்றனர். ஏனெனில் அவ்வாலிபன் செல்வந்தனாக இருந்தான்.

ஆறு நாட்கள் இயேசு அவ்வாலிபனுக்குக் கற்றுக் கொடுத்ததன் பின் மாலை வேளையில் அவ்வாலிபன் தனது நிர்வாண மேனியின் மேல் சணலால் ஆன போர்வை ஒன்றைப் போர்த்திக் கொண்டு இயேசுவிடம் வந்தான். அந்த இரவு முழுவதும் இயேசுவோடு தங்கியிருந்தான். இயேசு அவனுக்கு பரலோக ராஜ்யத்தின் இரகசியங்களைக் கற்றுக் கொடுத்தார். இயேசு விழித்தெழுந்ததும் யோர்தானின் மறுபுறத்திற்கு திரும்பிச் சென்றார்.

இதன் பிறகு (இன்று நடைமுறையில் உள்ள சுவிஷேசத்தில் காணப்படுவது போல்) (மாற்கு 10:35) யாக்கோபும் யோவானும் இயேசுவிடத்தல் வந்தனர்….. என தொடர்ந்து காணப்படுகிறது.

எனினும் “நிர்வாண மனிதனுடன் நிர்வாண மனிதன்” என்ற வார்த்தையோ அல்லது நீர் எழுதியுள்ள ஏனைய விடயங்களோ (மர்மச் சுவிஷேசத்தில்) காணப்படவில்லை.

மேலும் (மாற்கு 10;46)  ”பின்பு அவர்கள் எரிகோவுக்கு வந்தார்கள் ” என்ற வசனத்துக்குப் பின் மர்மச் சுவிஷேசத்தில் “அங்கு இயேசு விரும்பிய அவ்வாலிபனின் சகோதரி அவனது தாயோடும் சாலோமுடனும் இருந்தாள். இயேசு அவர்களை வரவேற்கவில்லை.” என்று மாத்திரம் காணப்படுகிறது. இதல்லாத நீர் எழுதியுள்ள அதிகமான விடயங்கள் பொய்கள் என்றே தோன்றுகின்றது. அவைகள் பொய்கள்தான்.- (கடிதத்தின் தமிழாக்கம்)

மேற்படி கிறிஸ்தவர்களது தவறான நம்பிக்கையை தரை மட்டமாக்கும் விதத்தில் அமைந்துள்ள ‘கிளெமென்ட்’ அவர்களால் எழுதப்பட்ட இக்கடிதம் பேராசிரியர் ‘மோர்டனால்’ கண்டுபிடிக்கப் பட்டு வெளியிடப்பட்டதும் கிறிஸ்தவ மதத்தைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றியவர்களும், திருச்சபைகளால் கூலிக்கு அமர்த்தப்பட்ட ஆய்வாளர்களும் (?) மோர்டன் கண்டெடுத்த கடிதத்தைப் பொய்ப்படுத்த பகீரதப் பிரயதனம் மேற்கொண்டனர்.

மோர்டனின் நிரூபண முறை:

எனினும் மோர்டன் தனது கண்டுபிடிப்பு உண்மையானது என்பதையும், குறித்த கடிதம் ‘கிளெமென்ட் ஓஃப் அலக்ஸாந்தரிய்யா’ என்ற அறிஞரால்தான் எழுதப்பட்டது என்பதையும் அதில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் வசனங்கள் மாற்குவினால் எழுதப்படதுதான் என்பதையும் அழுத்தம் திருத்தமாக நிரூபித்து The Secret Gospel: The Discovery and Interpretation of the Secret Gospel According to Mark “மாற்கு எழுதிய மர்மச் சுவிஷேசம் கண்டுபிடிப்பும் விளக்கவுரையும்” என்ற நூலையும் Clement of Alexandria and a Secret Gospel of Mark  “கிளெமென்ட் ஓஃப் அலக்ஸந்தரிய்யாவும், மாற்கு எழுதிய மர்மச் சுவிஷேசமும்” என்ற இரு நூற்களையும் வெளியிட்டார்.

மோர்டனின் நிரூபண முறை கீழ்வருமாறு நுணுக்கமானதாகவும், நவீன அறிவியல் ஆய்வு முறைமையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைந்திருந்தது.

1.மோர்டன் கண்டெடுத்த கடிதம் நவீன காலத்தில் எழுதப்பட்டதா? அல்லது 18ம் நூற்றாண்டைச் சார்ந்த ஒருவரால் மூலத்திலிருந்து பிரதி எடுக்கப்பட்டதா என்பதை பண்டைய எழுத்துமுறை ஆய்வாளர்களிடம் காண்பித்து அபிப்பிராயம் கேட்டார். அவர்களில் அதிகமானோர் கடிதத்தில் காணப்படும் எழுத்து முறை நவீன காலத்தையது அல்ல பதினேழாம் நூற்றாண்டுக்கும் பதினெட்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட பிரதிதான் என்பதை உறுதிசெய்தனர்.

2. குறித்த கடித்தில் காணப்பட்ட எழுத்து ‘கிளெமென்ட் உடையது தானா என்பது தொடர்பிலும் கிளெமென்ட் உடைய எழுத்து நடையுடன் நன்கு பரிச்சயமான நிபுணர்களிடம்  அபிப்பிராயம் கேட்டார். அதிக நிபுணர்கள் கடிதத்தில் காணப்படும் எழுத்து நடை கிளெமென்ட் உடைய நடையையே பெரிதும் ஒத்திருப்பதை உறுதி செய்தனர். அத்துடன் மோர்டன் கடித்தில் காணப்படும் சொற்களையும் எழுத்து நடையையும் விடயத்தை விபரிக்கும் முறையையும் கருத்தாக்கங்களையும் எடுத்து  இன்று உள்ள, ஏற்கனவே கிளெமென்ட் எழுதிய நூற்களுடன் மிக நுணுக்கமாக ஒப்பிட்டு கடிதம் கிளெமென்ட் உடையதுதான் என்பதை ஆணித்தரமாக நிரூபித்தார். இவரது இந்த நிரூபண முறை கடித்ததை கிளெமென்ட் தவிர வேறு யாரும் எழுதியிருக்க முடியாது என ஏனையோர் ஒப்புக் கொள்ளும் வகையில் அமைந்திருந்தது.

3.மேலும், கடிதத்தில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள சுவிஷேச வசனங்கள் மாற்குவின் சுவிஷேசம் எழுதப்பட்ட அதே நபரால்தான் எழுதப்பட்டுள்ளது என்பதையும் இன்று பாவனையில் உள்ள சுவிஷேச வார்த்தைகள், எழுத்து நடை மற்றும் சமயச் சித்தாந்தவியல் ஆகியவைகளை ஒப்பு நோக்கியும் நிரூபித்தார். (பார்க்க 6)

இறுதியாக ‘கிளெமன்ட் அவர்களின் கடிதம் உணர்த்தும் உண்மைகள் என்ன என்பதையும் பார்த்து விடுவோம்.

1.ஆரம்பகால கிறிஸ்தவ மதப்பிரிவுகள் தங்களது கொள்கை கோட்பாடுகளுக்கு ஆதாரங்களாக சுவிஷேசங்களில் இருந்து ஆதாரங்களைக் காட்டினார்கள். அவ்வாதாரங்கள் சுவிஷேசங்களில் இருந்து நீக்கப்பட்டு விட்டன அல்லது மறைத்து வைக்கப்பட்டு கவனமாகப் பாதுகாக்கப் படுகின்றன.

2.கிறிஸ்தவர்களது நம்பிக்கைப் பிரகாரம் இன்றுள்ள மாற்கு எழுதிய சுவிஷேசம் “பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டு” எழுதப்பட்டதல்ல. அதனால்தான் ‘மாற்கு’ தான் எழுதிய சுவிஷேசத்துடன் (இன்று புழக்கத்தில் இல்லாத) வேறு விடயங்களையும் சேர்த்து  எழுதினார்.

3.இயேசுவின் இரகசிய போதனைகள் சுவிஷேசங்களில் எழுதப்படவில்லை. மாறாக அவை ஏழு திரைகளுக்கு அப்பால் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.

4.பண்டைய தேவாலயங்கள் கிறிஸ்துவின் போதனைகளை மறைத்து வருவதுடன் அவை குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் போதிக்கப்படுகின்றன.

5.கிறிஸ்துவ மதகுருக்கள் உண்மைக்கு மாறாக சத்தியம் செய்யவும் தயங்கமாட்டார்கள்.

6.ஒரு சில உயர் நிலை மத குருக்களைத் தவிர ஏனைய கிறிஸ்துவர்கள் அனைவரும் முட்டாள்கள்! இருட்டிலே தத்தளிக்கும் மூடர்கள்!!.
7.அந்த உயர்நிலை மதகுருக்களுக்கு அனுமதிக்கப்பட்டது, விலக்கப்பட்டது என்ற வரையறைகள் எதுவும் கிடையாது. அனைத்தும் அவர்களுக்கு தூய்மையானதே!

8.இயேசு அரை நிர்வாண வாலிபனோடு ஒரு இரவு முழுவதும் தங்கியிருந்து!! பரலோக ராஜ்ஜியத்தின் இரகசியங்களை (?) கற்றுக் கொடுத்தார்.

இவ்வாறு ‘மாற்கு எழுதிய மர்மச் சுவிஷேசம்’ பற்றிய விடயங்கள் அம்பலத்துக்கு வந்ததன் மூலம் பைபிளை இறைவேதம் என்று நம்புகின்ற, அதில் கூட்டல், குறைத்தல் செய்யப்படவில்லை, என்ற கிறிஸ்த்தவர்களது (மூட) நம்பிக்கை தவிடுபொடியாக தகர்த்தெறியப்பட்டது.

இது தொடர்பில் யாராவது மாற்றுக் கருத்துகளையோ, எதிர்வாதங்களையோ முன்வைத்தால் அவைகளை பரிசீலித்து அறிவுபூர்வமாகவும் ஆதாரங்கள் அடிப்படையிலும் பதில் தருவோம் எனவும் தெரிவித்துக் கொள்கிறோம்.

துணை நின்றவை….
(1)
During the 1940s, academic Morton Smith had visited the Christian Orthodox Monastery of Mar Saba in the Judean wilderness. He stayed there for two months, participating with the monks in their daily schedule. It was built in the fifth century CE and is located about 12 miles southeast of Jerusalem. As a professor of ancient history at Columbia University, he revisited the monastery in 1958. He had decided to use his sabbatical time to catalog their library. While examining an 17th century book………..
dsc034121“மார் ஸபா”   மடாலயம்
(2)
dsc034121
(3)
Carpocrates
CARPOCRATES [Carpocrates] , fl. c.130-c.150, Alexandrian philosopher, founder with his son Epiphanes of a Hellenistic sect, notoriously licentious, related to Gnosticism. Epiphanes wrote a treatise, On Justice, that advocated communal ownership of property, including women; he died, age 17, at Cephalonia and was long worshiped as a deity there.
The Carpocratians believed that men had formerly been united with the Absolute, had been corrupted, and would, by despising creation, be saved in this life or else later through successive transmigrations. Jesus, they held, was but one of several wise men who had achieved deliverance.
Author not available, CARPOCRATES., The Columbia Encyclopedia, Sixth Edition 2006
The Columbia Encyclopedia, Sixth Edition. Copyright 2006 Columbia University Press
(4)
dsc034121
___79_______    ___________________    _ __
There are some interesting features of the shorter version—the one found in
the New Testament—that can be explained if the longer version were the original,
and this is some of the evidence that Smith and others have adduced for
their view. To take the second quotation first. Clement indicates that it appeared
after the first part of Mark 10:46: “And they came to Jericho; and as he
was leaving Jericho with his disciples. . . .” This is a strange verse for several
reasons. Why does it say “they came to Jericho” but then not indicate what
happened there? In other words, why would Mark mention their arrival in town
if they left without doing anything? And why does the text say that “they”
came but that “he and his disciples” left? Why not just say “they” came and
“they” left? These may seem like minor issues, but they are the kind of small
details that should give one pause.
Notice what happens when the second passage cited by Clement is inserted
into the account. They come to Jericho. Jesus encounters three women there
but refuses to see them (this is not the first time in Mark’s Gospel that Jesus
might seem a bit rude; see Mark 3:31–35). Then he and his disciples leave. The
passage seems to make better sense and the tiny problems with the details
disappear.Or consider the other of Clement’s two quotations of the Secret Gospel.
One passage that has always perplexed students of the canonical version of
Mark’s Gospel occurs near the end, when Jesus is arrested in the Garden of
Gethsemane. When the soldiers seize him, all his disciples flee. But there is
someone else there, “a young man” who is “clothed with a linen cloth over his
__80 ________   ___         _______
naked body.” The soldiers grab this unnamed man, but he escapes, nude, leaving
them with the linen cloth in their hands (Mark 14:51–52). Who is this
person, this follower of Jesus who has never been mentioned before? What is
he doing in Gethsemane? And why is he wearing only a linen garment? Interpreters
have propounded a host of possible solutions to these questions over
the centuries, but there has never been any consensus.14
(5)
dsc034121
                                                    மோர்ட்டன் கண்டெடுத்த கிரேக்கப் பிரதி
(6)
Smith attempted to confirm the authenticity of the letter:

Was the copy of Clement’s letter handwritten in the book in the 18th century, or is it a modern forgery: The book was missing its covers and title page by the time that Smith found it. However, he was able to identify it as a book printed by Isaac Voss, a printer in Amsterdam, in 1646. 4 This established the earliest date when the letter was copied. Smith showed the photographs that he had taken of the letter to a number of palaeographers — ancient handwriting experts. Most of them agreed that the writing style dated the copy at between 1700 and 1800 CE. The letter does not seem to be a modern forgery.

Was the original letter really written by Clement in the late second century CE or by a forger at a later time? Smith showed the text of the letter to many scholars who had specialized in the writings of Clement. Most agreed that the letter resembled closely Clement’s style. Smith then made “a point-by-point comparison of the vocabulary, writing style, modes of expression and ideas found in the letter with” other writings that are known to have been produced by Clement. 8 According to author Bart Ehrman, “it would be well nigh impossible to imagine someone other than Clement being able to write it.9

Were the fragments of Secret Mark consistent with the writings of the author of the Gospel of Mark?  A careful analysis of the letter’s “vocabulary, writing style, modes of expression, and theology“ showed that it matched those of the author of Mark.

0 Comments:

Post a Comment