Site Network: Home | Blogcrowds | Gecko and Fly | About

ஆடு, மாடு, ஒட்டகம், கழுதையைக் கூட விட்டுவைக்காமல் அனைத்தையும் கொன்றொழிக்கக் கட்டளையிடும் பைபிள், பயங்கரவாதத்தின் பிறப்பிடம் அல்லவா?. இதன் மீது சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்கும் "ஜனநாயக அமைதி தூதர்களாக" வேடமிட்டு வலம் வரும் மேற்கத்திய நாகரீகவாதிகள் அல்லவோ பயங்கரவாதத்தின் ஒட்டு மொத்த திரு உருவங்கள்?! 
 
அன்றைய புரோகிதர்கள் தாங்கள் செய்த அட்டூளியங்களுக்கு மதச் சாயம் பூசினர். தங்கள் செயல்களைக் கடவுளின் பெயரால் நியாயப் படுத்தினர். புரோகிதக் கருத்துக்கள் வேதநூல்களாக மதிக்கப்பட்டன. சிலுவை யுத்தங்கள் முதல் இன்றைய ஈராக், ஃபலஸ்தீன் அடக்கு முறைகள் வரை வேதங்களின் பெயரால் நியாயம் கற்பிக்கப்படுகின்றன. மக்களிடம் தங்கள் மார்க்கம் அன்பைப் போதிக்கிறது என்று பிரச்சாரம் செய்யும் கிறிஸ்தவர்களாகட்டும், அல்லது கடவுளின் பிள்ளைகள் என்று தங்களை இனம் காட்டும் யூதர்களாகட்டும், இவர்கள் நடத்திய இனப படுகொலைகள் வரலாற்றின் வடுக்களாக இன்றும் இருந்து கொண்டிருக்கி்ன்றன. இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த மதவாதிகள் தங்களிடம் உள்ள வேதம் கூறும் பயங்கரவாதக் கருத்துக்களை மக்களிடம் மறைத்து விட்டு அதன் முலாம் பூசிய பகுதியை மட்டும் வைத்து பிரச்சாரம் நடத்தி மத வியாபாரம் நடத்தி வருகின்றனர். இவர்களின் உண்மை முகத்தை அடையாளம் காட்டும் பொருட்டு பைபிள் கூறும் பயங்கரவாதம் என்ற தலைப்பில் நான்கு தொடர்கள் வெளியிட்டிருக்கிறோம். தொடர்ந்து பைபிளின் பயங்கரவாதக் கருத்துக்களைப் பாருங்கள்:

ஆண், பெண், குழந்தைகள் வித்தியாசம் இன்றி உயிருள்ள அனைவரும் கொலை செய்யப்பட வேண்டும்!
இணைச்சட்டம் (உபாகமம்) 20 ஆம் அத்தியாயம் 16 ஆம் வசனம் கூறுகிறது.

”ஆனால் இந்த மக்களின் நகர்களை உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு உரிமைச் சொத்தாகக் கொடுத்துள்ளதால், அதில் உயிர் வாழும் எதையும் கொல்லாமல் விடாதே”
பாருங்கள்- உயிர் வாழும் ஒன்றையும் விடக் கூடாதாம்! அதாவது குழந்தைகளாகட்டும் பெண்களாகட்டும், முதியவர்களாகட்டும் ஏன் விலங்கினங்களாகட்டும் ஒன்றையும் உயிரோடு விட்டு வைக்காமல் கொல்ல வேண்டும். இது கடவுளின் கட்டளையாம்(?!) கிறிஸ்தவர்களே! தீவிரவாதத்தைப் பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை உள்ளது? பள்ளிக் கூடங்களைக் குறிவைத்து குழந்தைகளை மிகக் கொடூரமான முறையில் இஸ்ரேல் கொலை செய்தது தம்மிடம் தல்மூது என்ற பெயரில் இருக்கும் பைபிளின் பழைய ஏற்பாடு செய்த இவ்வுபதேசத்தின் அடிப்படையில் தானே?

இன்னும் இதே பகுதியின் 20 ஆம் வசனம் கூறுவதைப் பாருங்கள்

”உன்னோடு போர் புரியும் நகருக்கு எதிராக அதை வீழ்த்தும் வரை அவற்றைக் கொண்டு முற்றுகைக் கொத்தளங்களை எழுப்பலாம்”
கர்த்தரின் கட்டளைப்படி பெண்கள் பச்சிளம் குழந்தைகள் உட்பட இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். இது கர்த்தரின் கட்டளையாம்! ஆடு மாடுகளும் விட்டு வைக்கப்படவில்லை!

சாமுவேல் என்பவர் இறைவனி்ன் கட்டளையாகக் கூறுகிறார்

ஆகவே சென்று அமலேக்கியரைத் தாக்கி, அவர்கள் உடமைகள் அனைத்தையும் அழித்தொழியும். அவர்கள் மீது இரக்கம் காட்டாமல் ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும், பாலகர்களையும், மாடுகள், ஆடுகள், ஒட்டகங்கள், கழுதைகள் அனைத்தையும் கொன்றுவிடும் சவுல் வீரர்களைத் திரட்டி அவர்களைத் தொலாயிமில் கணக்கெடுத்தார். இரண்டு இலட்சம் காலாள் படையினரும், பத்தாயிரம் யூதாவினரும் இருந்தனர்” (1 சாமுவேல் 15: 3,4)
இந்த அக்கிரமத்தைச் செய்ய படைகளின் கடவுள் அவர்களுக்கு கட்டளை பிறப்பித்தாராம்! தாங்கள் செய்யும் அக்கிரமத்துக்கு நியாயம் கற்பிக்க அக்கிரமத்தை இறைவன் மீது சாட்டும் புரோகிதர்களின் இழி செயலை இது காட்டவில்லையா?

ஆடு, மாடு, ஒட்டகம், கழுதையைக் கூட விட்டுவைக்காமல் அனைத்தையும் கொன்றொழிக்கக் கட்டளையிடும் பைபிள், பயங்கரவாதத்தின் பிறப்பிடம் அல்லவா?. இதன் மீது சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்கும் "ஜனநாயக அமைதி தூதர்களாக" வேடமிட்டு வலம் வரும் மேற்கத்திய நாகரீகவாதிகள் அல்லவோ பயங்கரவாதத்தின் ஒட்டு மொத்த திரு உருவங்கள்?!

பயங்கரவாதத்தின் ஆணிவேர்கள் இன்னும் தோண்டப்படும்!

நன்றி: http://christianpaarvai.blogspot.com 

0 Comments:

Post a Comment