Site Network: Home | Blogcrowds | Gecko and Fly | About

 
கிருஸ்தவம் ஒரு மதமல்ல. அது ஒரு மாயை
.
மறைந்த போப் இரண்டாம் ஜான்பால் அவர்கள் ஒருமுறை வாடிகன் மைதானத்தில் ஆற்றிய உறையில் இவ்வாறு சொன்னார். IF THERE IS NO CRUCIFIXION, NO CHRISTIANITY. ஏசுவின் சிலுவை மரணம் மட்டும் இல்லையென்றால் கிருஸ்தவமே இல்லை என்றார். உண்மைதான், ஏசு உலக மக்களின் பாவங்களைக் கழுவுவதற்காக சிலுவையில் உயிர்நீத்தார். பின்னர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்ற கற்பனையில்தான் கிருஸ்தவ மதமே கட்டமைக்கப்பட்டுள்ளது. இது மாபெரும் அவதூறு என இறைவனின் இறுதி வழிகாட்டல் நூல் அல்-குர்ஆன் மிகத்தெளிவாகவே எச்சரிக்கிறது.

இன்னும், ''நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்'' என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும் இவ் விஷயத்தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை. அல்-குர்ஆன் (4 : 157)

ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான். அல்-குர்ஆன் (4 : 158)
 
குர்ஆனுடைய உண்மை விளக்கத்தின்படி சுருங்கக்கூறினால் THERE WAS NO CRUCIFIXION, SO NO CHRISTIANITY அதாவது ஏசு சிலுவையில் மரணிக்கவில்லை, கிருஸ்தவம் என்பதும் இல்லை. இதை முஸ்லிம்களாகிய நாம் குர்ஆனிலிருந்து விளக்கினால் கிருஸ்தவர்கள் ஒப்புக்கொள்வார்களா?. எனவேதான் ஏசு சிலுவையில் மரணித்தார் என்பது உண்மையல்ல கற்பனை, கிருஸ்தவமே ஒரு மாயை என்பதை பைபிளிலிருந்தே சுட்டிக்காட்டுகிறோம் - இன்ஷா அல்லாஹ்.

கிருஸ்தவ நண்பர்கள் விருப்பு வெறுப்பின்றி ஆக்கத்தை முழுவதுமாக படிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். காரணம் not to take things for granted.' - but "PROVE ALL THINGS!" (1 Thessalonians 5:21) எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள். (தெசலோனிக்கேயர் 5:21) என்று பைபிள் கூறுகிறது. எனவே பைபிளை இறைவேதமாக நம்பும் ஒவ்வொரு கிருஸ்தவ அன்பர்களும் எங்கள் மீது கோபப்படாமல் சங்கைக்குரிய ஏசுபிரான் சிலுவையில் உயிர்நீத்தாரா? கிருத்தவ மதம் உண்மையா? என்ற சற்று நிதானத்துடன் சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.
 
யோனாவின் அற்புதமே ஏசுவின் அற்புதம்.
.
ஏசு என்ற நபி ஈஸா (அலை) அவர்கள் தீனுஸ் இஸ்லாம் என்ற ஓரிறைக் கொள்கையை இஸ்ரவேலர்களாகிய யூதர்களிடம் பிரச்சாரம் செய்தபோது யூதர்கள் தொடர்ந்து மறுத்தனர். நபி ஏசு (அலை) அவர்கள் இறைகட்டளைபடி பல அற்புதங்களை செய்துகாட்டியும் அந்த யூதர்கள் நபி ஏசு (அலை) அவர்களை இறைத்தூதராக ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக ஒரு அத்தாட்சியை, அற்புதத்தை நபி ஏசு (அலை) அவர்களிடம் கேட்டனர். இதை மத்தேயு தான் எழுதிய சுவிசேஷத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

அப்பொழுது, வேதபாரகரிலும் பரிசேயரிலும் சிலர் அவரை நோக்கி: போதகரே, உம்மால் ஒரு அடையாளத்தைக் காண விரும்புகிறோம் என்றார்கள். (மத்தேயு 12:38)

இதைக் கேட்ட ஏசு அவர்கள் கோபத்துடன் ஒரு பதிலைக் கூறியதாக பைபில் கூறுகிறது. அது என்ன பதில் கீழே பார்வையிடுங்கள்.

அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள். ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. யோனா (Three days and Three nights) இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார். (மத்தேயு 12:39-40).

இதில் மூன்று விஷயங்கள் கவனிக்கப்படவேண்டும்.

1) விபச்சார சந்ததியார் என்று ஏசு கோபப்படும் அளவிற்கு அந்த யூதர்கள் மோசமான முறையில் நடந்திருக்கவேண்டும். (இன்று இணையங்களில் இஸ்லாத்தைத் தூற்றுபவர்களைக் கூட நாம் இவ்வாறு பழிக்கவில்லை). காரணம் யூதர்கள் இறைச் செய்தியை ஏற்றுக் கொள்ளாமல் இறைத்தூதர்களைப் புறக்கணித்ததாலும், இறைத்தூதர்களை கொலை செய்ததாலும், இறை வேதங்களில் தங்கள் சுய கருத்துக்களை புகுத்தி அதில் கலப்படம் செய்ததினாலேயே ஏசுவால் இவ்வாறு பழிக்கப்பட்டனர். (அன்று ஏசுவால் பழிக்கப்பட்ட யூதர்கள் இன்று கிருஸ்தவர்களுக்கு நெருங்கிய கூட்டாளிகள் என்பது வேறுவிஷயம்).

2) ஏசுவிடம் யூதர்கள் அத்தாட்சியைக் கேட்டபோது நான் பிறவிக்குருடை போக்கவில்லையா? தண்ணீரை மதுவாக மாற்றிக்காட்டவில்லையா? (யோவான் 2:9) என்றெல்லாம் அவர்களிடம் வினா எழுப்பவில்லை. மாறாக யோனாவின் அத்தாட்சி மட்டுமே என்னுடைய அற்புதம்/அத்தாட்சி என்று ஏசு ஒரே வரியில் பதில் சொல்கிறார். THERE SHALL NO SIGN (no miracle) BE GIVEN TO IT, BUT THE SIGN (miracle) OF THE PROPHET JONAS ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப் படுவதில்லை.

3) யோனாவின் அத்தாட்சியே என்னுடைய அத்தாட்சி என்ற இந்த வார்த்தையை வைத்துக்கொண்டுதான், ஏசு உலகமக்களின் பாவங்களுக்காக சிலுவையில் உயிர் நீத்தார், பின்னர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். மூன்று நாட்கள் மரணத்திற்குப் பிறகு அதிசய உயிர்த்தெழுந்ததின் காரணமாக ஏசு யோனாவைப் போன்றவர் ஆகிறார் என்று ஏசுவின் சிலுவை மரணத்தை கிருத்துவர்கள் நிறுவுகின்றனர். ஏசு யோனாவைப் போன்றவரா? ஏசு சிலுவையில் உயர்நீத்தாரா? என்பதை பார்ப்போம்.
.
அது என்ன யோனாவின் அற்புதம்?
.
யோனா என்ற நபி யூனுஸ் (அலை) அவர்களின் அத்தாட்சியை பற்றி விளங்குவதற்கு முன்னால். பைபிள் கூறும் நபி யோனா (அலை)அவர்களின் சரித்திரத்தை நினைவு கூறவேண்டும். இச்சரித்திரங்கள் ஒவ்வொரு முஸ்லிம், கிருஸ்தவ மற்றும் யூதக்குழந்தைகளுக்கும் தெரியும். அதுதான் JONAH ON THE WHALE மீன் வயிற்றில் தீர்க்கதரிசி யோனா.

இறைவன் நபி யோனா (அலை) அவர்களை நினேவா (அல்லது நினிவா) நகரை நோக்கி இறைப்பிரச்சாரப் பணி செய்யுமாறும், நினேவா நகர் மக்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுமாரும் கட்டளையிட்டான். ஆனால் நபி யோனா (அலை)அவர்களோ, இறைகட்டளைபடி நினேவா நகருக்கு செல்லாமல் ஜாப்பா என்ற ஊருக்கு படகில் பயணம் சென்றார்கள்.

அவ்வாறு நடுக்கடலில் படகு சென்று கொண்டிருந்தபோது கடல் கொந்தளிக்கின்றது. அன்றைய மீனவர்களின் மூடநம்பிக்கைபடி இறைவனுக்கு குற்றமிழைத்த நிலையில் எவரும் கடல்பிரயாணம் செய்தால் கடல் கொந்தளிக்கும் என்று நம்பினர். அப்படி கடல் கொந்தளிக்கும் போது அந்த குற்றவாளியை கடலில் வீசி எறியவில்லையெனில் கடல் அலையின் சீற்றத்தால் அப்படகில் பிரயாணம் செய்யும் அனைவரும் அழிவர் என்பது அவர்களுடைய நம்பிக்கையாகும். மக்களோடு மக்களாக ஜாப்பா நோக்கி நபி யோனா (அலை)அவர்கள் பிரயாணம் செய்த அந்த நாளிலும் அவ்வாறு கடல் கொந்தளித்தது. எனவே படகிலிருந்த அம்மீனவர்கள் குற்றமிழைத்தவரை கண்டுபிடிக்கும் முறையாக அவர்கள் நம்பியிருந்த (LOT SYSTEM ) சீட்டுக்குலுக்கள் முறைப்படி (அல்லது பகடைமுறைப்படி) சீட்டுப்போடவே, நபி யோனா (அலை)அவர்களின் பெயரே வந்தது.
அவர்கள் யார்நிமித்தம் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டதென்று நாம் அறியும்படிக்குச் சீட்டுப்போடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு சீட்டுப்போட்டார்கள். யோனாவின் பேருக்குச் சீட்டு விழுந்தது. (யோனா 1:7)

அதற்கு அவன்: நீங்கள் என்னை எடுத்துச் சமுத்திரத்திலே போட்டு விடுங்கள். அப்பொழுது சமுத்திரம் உங்களுக்கு அமர்ந்திருக்கும் என்னிமித்தம் இந்தப் பெரிய கொந்தளிப்பு உங்கள்மேல் வந்ததென்பதை நான் அறிவேன் என்றான். (யோனா 1:12)

நபி யோனா (அலை)அவர்களும் தானே குற்றவாளி என்றும், இறைகட்டளைக்கு மாறுசெய்துவிட்டேன் என்றும் ஒப்புக்கொண்டு நடுக்கடலில் குதிக்க தயாரானார்கள். அவ்வாறு நடுக்கடலில் போடப்பட்ட நபி யோனா (அலை)அவர்களை ஒரு மிகப்பெரும் மீன் விழுங்கியது. மூன்று நாட்கள் மீன் வயிற்றில் உயிரோடு தங்கிய நபி யோனா (அலை)அவர்கள் இறைவனிடம் பாவ மன்னிப்புத் தேடினார்கள். பின்னர் அந்த திமிங்கலம் மீன் நபி யோனா (அலை)அவர்களை கடற்கரையில் உயிரோடு உமிழ்ந்தது. இதுதான் நபி யோனா (அலை)அவர்களின் மூன்றுநாட்கள் மீன்வயிற்றில் உயிரோடு தங்கிய அற்புத சரித்திரம்.

யோன உயிரோடிருந்தார்களா? மரணித்தார்களா?

இதில் முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய விஷயம் நபி யோனா (அலை)அவர்கள் தங்களின் குற்றத்தை தானாகவே முன்வந்து ஒப்புக்கொண்டபடியால் மீனவர்கள் அவர்களின் கைகால்களை கட்டி துன்புறுத்தி குற்றுயிராக்கி கடலில் வீசி எறியவில்லை. மாறாக எந்த நிலையில் படகில் ஏறினார்களோ அதே உடல் நலத்துடனே கடலில் எறிப்படுகிறார்கள். அவ்வாறு கடலில் போடப்படும் போது நபி யோனா (அலை)அவர்கள் உயிருடன் இருந்தார்களா மரணித்தார்களா? - உயிரோடு இருந்தார்கள் என்பதே பதில்.

அவ்வாறு வீசப்பட்ட நபி யோனா (அலை)அவர்களை அந்த மீன் முழுமையாக விழுங்கியது. மீனுக்கு ஒரு இரை கிடைத்தால் பற்களால் கடித்து குதறி விழுங்கும். அம்மீன் நபி யோனா (அலை)அவர்களை அவ்வாறு செய்யவில்லை. காரணம் அவ்வாறு கடித்து குதறி நபி யோனா (அலை)அவர்கள் மரணித்திருந்தால் அதற்குப் பெயர் அற்புதமல்ல. எனவே அம்மீன் இறைக் கட்டளைபடி நபி யோனா (அலை)அவர்களை முழுவதுமாக விழுங்கியது. இப்போது நாம் கேட்கிறோம், இவ்வாறு அந்த மீன் விழுங்கும் நிலையில் நபி யோனா (அலை)அவர்கள் உயிருடன் இருந்தார்களா மரணித்தார்களா? - உயிரோடு இருந்தார்கள் என்பதே பதில்.

"JONAH PRAYED UNTO THE LORD HIS GOD OUT OF THE FISH'S BELLY?" (Jonah 2:1). அந்த மீனின் வயிற்றிலிருந்து, யோனா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: (யோனா 2:1). இவ்வாறு மீனால் விழுங்கப்பட்ட நபி யோனா (அலை)அவர்கள் மூன்று நாட்கள் மீன் வயிற்றில் தங்கினார்கள். இறைவனிடம் பிரார்த்தனையும் செய்ததாக மேற்கண்ட பைபிள் வசனம் கூறுகிறது. மரணமடைந்து விட்ட ஒரு மனிதன், இறைவனிடம் பிரார்த்திக்க முடியுமா? அல்லது தன்னுடைய குற்றத்தை வருந்தி அழுது புலம்பத்தான் இயலுமா? இப்போது சொல்லுங்கள் மீன் வயிற்றில் மூன்று நாட்கள் நபி யோனா (அலை)அவர்கள் உயிருடன் இருந்தார்களா மரணித்தார்களா? -உயிரோடு இருந்தார்கள் என்பதே பதில்.

மூன்றாம் நாள் அந்த மீன் இறைக்கட்டளை படி நபி யோனா (அலை) அவர்களை கடற்கரையில் உமிழ்ந்தது. அவ்வாறு உமிழ்ந்தபோது நபி யோனா (அலை)அவர்கள் உயிருடன் இருந்தார்களா மரணித்தார்களா? - உயிரோடு இருந்தார்கள் என்பதே பதில்.

இவ்வாறு நபி யோனா (அலை) அவர் அந்த மூன்னு நாட்களும் Alive! Alive!! Alive!!! உயிரோடு இருந்தார்கள்! உயிரோடு இருந்தார்கள்!! உயிரோடு இருந்தார்கள்!!! என்பது இவ்வரலாற்றைப் படிக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தெரியும்.

யோனாவைப் போல் ஏசு இல்லை

கிருஸ்தவ நண்பர்களே இப்போது சற்று சிந்தியுங்கள் "AS JONAH WAS ..... SO SHALL THE SON OF MAN BE" LIKE JONAH யோனா இருந்தததைப் போல்...மனுஷகுமாரனாகிய நானும் அதாவது யோனாவைப் போல என்று ஏசு கூறியதாக பைபிள் கூறுகிறது.
  1. தீர்க்கதரிசி யோனா அவர்கள் படகிலிருந்து தூக்கி கடலில் இறக்கப்பட்டபோது அவர் உயிரோடு இருந்தார்.
  2. மீன் யோனாவை விழுங்கியயோதும் அவர் உயிரோடே இருந்தார்.
  3. மூன்று நாட்கள் யோனா மீன் வயிற்றில் இருந்தபோதும் அவர் உயிருடன்தான் இருந்தார்.
  4. மீன் அவரை கடற்கரையில் உமிழ்ந்த போதும் அவர் உயிருடன்தான் இருந்தார்.
ஆனால் கிருஸ்தவர்களின் நம்பிக்கையைப் பாருங்கள். சங்கைக்குரிய தீர்க்கதரிசி ஏசுவை யூதர்கள் பிடித்து சிலுவையில் அறைந்ததாகவும், அவர் உலக மக்களின் பாவங்களை நீக்குவதற்காக சிலுவையில் உயிர்நீத்தாகவும் கிருஸ்துவர்கள் கூறுகின்றனர். அவ்வாறு மரணித்த ஏசு மூன்று நாட்களுக்குப் பின்னர் உயிர்த்தெழுந்தார் என்பதும் கிருஸ்தவர்களின் நம்பிக்கை.

தீர்க்கதரிசி யோனா 3 நாட்கள் உயிருடன் இருந்தார் என்று பைபிள் சொல்கிறது. யோனாவைப் போலத்தான் ஏசுவும் என்றும் கூறுகிறது. ஆனால் தீர்க்கதரிசி ஏசுவோ 3 நாட்கள் மரணித்துவிட்டதாக கிருஸ்தவர்கள் சொல்கிறார்கள். இந்த முரண்பாட்டின் மூலம் ஏசு, யோனாவைப் போல் அல்ல என்று நிரூபனமாகிவிட்டது. ஏசு, யோனாவைப் போல இல்லை என்று ஒப்புக்கொள்வதைத் தவிர இங்கு வேறு வழியுமில்லை. எனவே கிருஸ்தவர்கள் ஏசு உண்மை தீர்க்கதரிசி இல்லை என்ற முடிவிற்கு வரவேண்டும் அல்லது ஏசு சிலுவையில் அறையப்படவில்லை என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். இந்த இரண்டு நிலையில் எதை ஒப்புக்கொண்டாலும் கிருஸ்தவம் என்பது ஒரு மாயை, ஏசுவின் சிலுவை மரணம் நடைபெறவில்லை என்ற உண்மை வெட்ட வெளிச்சமாகும். இதைத்தான் அருள்மறை திருக்குர்ஆன் 4:157,158 வசனங்களில் தெளிவு படுத்துகிறது.

கிருஸ்தவர்கள் தேவகுமாரராக நம்பிக் கொண்டிருக்கும் ஏசு, யோனாவைப் போல இல்லை என்ற உண்மை கிருஸ்தவ மத கோட்பாட்டிற்கும், கிருஸ்தவ திருச்சபைகளுக்கும் விழுந்த பேரடியாக இருப்பதால், இதற்கு ஏதாவது சப்பைக் கட்டுகட்டி, பூசி மெழுகி, ஏசு சிலுவையில் மரணித்தார் என்பதை நிரூபிப்பதற்காக கிருத்தவச் திருச்சபைகள் சில குறுக்கு வழியை யோசித்தனர். அதன்படி மத்தேயு 12:39-40 வசனங்களை (வழக்கம்போல) திரித்தனர்.

FOR AS JONAS WAS THREE DAYS AND THREE NIGHTS IN THE WHALE'S BELLY; SO SHALL THE SON OF MAN BE THREE DAYS AND THREE NIGHTS IN THE HEART OF THE EARTH இதில் THREE என்று நான்கு முறை வந்துள்ளது எனவே 'மத்தேயு 12:39-40 வசனங்கள் ஏசு, யோனாவைப் போல் என்ற கருத்தைப் போதிக்கவில்லை மாறாக TIME FACTOR அது மூன்று நாட்கள் என்ற கால அளவைத்தான் குறிக்கிறது என்கின்றனர். அதாவது தீர்க்கதரிசி யோனா 3 நாட்கள் மீன் வயிற்றில் இருந்ததைப் போல, சிலுவையில் மரணித்த ஏசு 3 நாட்கள் பிணஅறையில் (sepulcher) இருந்தார் என்று கூறுகிறார்கள். இதிலும் கிருஸ்தவர்களுக்கு தோல்வியே கிடைக்கிறது.

ஏசு மூன்று நாட்களா பிணஅறையில் இருந்தார்?

பைபிளை படித்த கிருஸ்தவ நண்பர்களிடம் ஏசு சிலுவையில் அறையப்பட்டது எப்போது? எந்தக்கிழமையில்? என்று வினவுங்கள். அது வெள்ளிக்கிழமை மாலை சூரியன் அஸ்தமிக்கும் நேரத்திற்கு முன்னர் என்பார்கள். நியூஜிலாந்திலிருந்து அமெரிக்காவரை, ஆஸ்திரேலியா முதல் ஐரோப்பா வரை அனைத்து கிருஸ்த்தவ நாடுகளும் ஒத்துக்கொண்ட ஒரு விஷயம்;. அதனால்தான் ஈஸ்டர் பண்டிகை என்ற GOOD FRIDAY புனித வெள்ளியை கிருஸ்தவர்கள் அனுஷ்டிக்கின்றனர்.

சரி அப்படி சிலுவையில் மரணமடைந்த ஏசு எப்போது உயிர்த்தெழுந்தார் எனக் கேட்டால் மூன்றாம் நாள் ஞாயிறு காலை சூரியன் உதிக்கும்முன் என்று பதிலளிப்பர். காரணம் ஞாயிற்றுக் கிழமை (வாரத்தின் முதல் நாள்) சூரியன் உதயமாகும் முன் மேரிமெக்டலின் ஏசு வைக்கப்பட்டிருந்த பிணஅறையை (Tomb) பார்த்தார், பிணஅறை (Tomb) காலியாக இருந்தது. We must not forget that the Gospels are explicit in telling us that it was "before sunrise" on Sunday morning (the FIRST day of the week), that Mary Magdalene went to the tomb of Jesus and found it empty.

யூதர்களின் நம்பிக்கைபடி பாவம் செய்தவர்களையும், குற்றம் இழைத்தவர்களையும் சிலுவையிலேற்றிக் கொள்வர். காரணம் அந்த பாவி மரண வேதனையை நீண்ட நேரம் சுவைக்க வேண்டும் என்பதற்காக. சிலுவையில் அறையப்பட்ட ஒருவரின் உடலிலிருந்து குருதிகள் அனைத்தும் வெளியேறி உயிர் பிறிவதற்கு குறைந்தது 5 முதல் 6 மணி நேரங்களாவது ஆகும். யூதர்களின் பார்வையில் அன்று ஏசு சாபத்திற்குள்ளானவர். அடுத்தநாள் சனிக்கிழமை யூதர்களின் புனித நாளாக இருந்ததால் வெள்ளிக்கிழமை மாலையே அவசர அவசரமாக ஏசு சிலுவையில் அறையப்படுகிறார்.

எனினும் கிருத்துவர்களின் நம்பிக்கைப்படி ஏசுவின் உடல் மூன்று நாட்கள் பிண அறையில் (வழஅடி) இருந்ததா என்பதை பார்ப்போம்.


-------- ஈஸ்டர் வாரம் -----------------------பிணஅறையில் ஏசுவின் உடல் ----------------------------------------------------------இருந்த கால அளவு

---------------------------------------------------                   காலை---------இரவு
வெள்ளிக் கிழமை மாலை
(சூரியன் மறையும்முன்)------------------------------இல்லை-------ஒரு இரவு

சனிக்கிழமை
(பிணஅறையில் இருந்திருக்கலாம்)---------------ஒரு பகல்------ஒரு இரவு

ஞாயிற்றுக் கிழமை (சூரியன் உதிக்கம்
முன் உடல் காணவில்லை)
------------------------- -இல்லை--------இல்லை

-------------------------------                      மொத்தம்-------- 1 பகல்------2 இரவுகள்
 
வெள்ளிக்கிழமை மாலைதான் (சூரியன் மறையும் முன்னர்) ஏசு சிலுவையில் அறையப்படுகிறார் எனவே வெள்ளிக்கிழமை காலை அவர் உடல் பிணஅறையில் இருந்ததற்கு சாத்தியமில்லை. அன்று வெள்ளி இரவு பிணஅறையில் அவர் உடல் இருந்திருக்கலாம்.

அடுத்தநாள் சனிக்கிழமை காலையும், அன்று இரவும் ஏசுவின் உடல் பிணஅறையில் இருந்திருக்கலாம்.

அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை காலை சூரியன் உதயமாவதற்கு முன்னர் மேரிமெக்டலின் பிணஅறையைப் பார்த்தார் அதுகாலியாக இருந்தது. எனவே இது வரை ஒரு பகலும் இரண்டு இரவுகளும் பிண அறையில் ஏசுவின் உடல் இருந்திருக்கிறது.

இந்நிலையில் தீர்க்கதரிசி யோனா 3 நாட்கள் மீன் வயிற்றில் இருந்ததைப் போல, சிலுவையில் மரணித்த ஏசு 3 நாட்கள் பிணஅறையில் (Tomb) இருந்தார் என கிருத்துவ திருச்சபைகள் அப்பாவி கிருஸ்தவர்களின் காதில் பூசுற்றியது என்னாயிற்று?

JONAS WAS THREE DAYS AND THREE NIGHTS IN THE WHALE'S BELLY; யோனா 3 பகலும் 3 இரவுகளும் மீன்வயிற்றில் இருந்தார். ஆனால் ஏசுவோ 1 பகலும் 2 இரவுகள் மட்டும்தானே பிணஅறையில் (வழஅடி) இருந்துள்ளார்? 3 பகல் 3 இரவுகளும், 1 பகல் 2 இரவுகளும் சமமாகுமா?

IS 3 + 3 and 1 + 2 are equal ?

3 + 3 ம், 1 + 2 ம் சமமாகுமா?

அணுவியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனோ அல்லது கணிதமேதை இராமானுஜமோ வந்தால்கூட இதை சமப்படுத்தி காட்ட இயலாது.

எனவே யோனாவைப் போல ஏசு உயிரோடு இருக்கவில்லை என்று முன்னர் நிரூபனமாகியதைப் போல, இப்போது (TIME FACTOR) மூன்று நாட்கள் என்ற கால அளவைத்தான் குறிக்கிறது என்று கூற்றும் பொய்யாகி விட்டது.

இதை உணர்ந்து கொண்ட ராபர்ட் பஹே என்ற கிருஸ்தவ அறிஞர் ஏசு வெள்ளியன்று சிலுவையில் அறையப்படவில்லை மாறாக புதன் கிழமைதான் சிலுவையில் அறையப்பட்டிருக்க வேண்டும் என்றார். இதை டர்பன் (South Africa-Durban) நகரிலுள்ள ஹோலிடே இன் (Holiday Inn) நட்சத்திர ஹோட்டலில் கருந்தரங்கமாக நடத்தியது மட்டுமல்லாது இக்கருத்தை ப்லைன் ட்ரூத் (Plain Truth) இதழிலும் வெளியிட்டார். காரணம் வெள்ளிக் கிழமையிலிருந்து கணக்கிட்டால் 3 பகல் 3 இரவுகள் வரவில்லை என்பதால் அவர் புதன் இரவிலிருந்து கணக்கிடச் சொன்னார்.

என்ன விளையாட்டு இது? கடந்த 2000 வருடங்களாக புனித வெள்ளி, புனித வெள்ளி என்று கூப்பாடு போடுவது வெற்றுக்கூச்சலா என்று கேட்கத் தோன்றுகிறது. பைபிள் பழைய ஏற்பாட்டின் 300க்கும் மேற்பட்ட தூத்துச் செய்திகள் ஏசு சிலவையில் அறையப்பட்ட புனித வெள்ளியன்றுதான் பரிபூரனமானது என்ற கிருத்தவ நம்பிக்கை என்ன ஆயிற்று? இவ்வுலகின் 200 கோடி கிருஸ்தவர்களும் தங்கள் மதத்தின் அஸ்திவாரமாக நம்பும் தங்கள் கடவுளின் சிலுவை மரணத்தைப் பற்றிய 2000 வருடங்கள் அறியாமையை வெளிக்கொண்டு வந்ததற்கு ராபர்ட் பஹே அவர்களை ஒரு வகையில் பாராட்டத்தான் வேண்டும். அறிஞர் ராபர்ட் பஹேயின் ஆய்வின்படி புனித வெள்ளி என்பதல்ல புனித புதன் என்பதே கிருத்துவர்களின் புனித நாள். ஈஸ்டர் பண்டிகை, புனித வெள்ளி என்று கிருஸ்தவர்களை கடந்த 2000 வருடங்களாக சைத்தான் வழிகெடுத்து விட்டானா?

ஆகையால் மக்களே! கிருஸ்தவர்கள் யாரை தேவகுமாரன் என்று நினைத்துக் கொண்டும், அவர் சிலுவையில் மரணித்தார் என்றும் நம்புகிறார்களோ அவருக்கும் அல்லாஹ்வின் சங்கை மிக்க இறைத்தூதர்களின் ஒருவரான ஏசு என்ற ஈஸா (அலை) அவர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும் ஏசு என்ற ஈஸா (அலை) அவர்கள் இறைவனோ அல்லது தேவகுமாரரோ அல்ல மாறாக இறைவனின் கண்ணியத்திற்குரிய இறைத்தூதர்களில் ஒருவராவார். ஏசு என்ற ஈஸா (அலை) அவர்களை எவரும் கொல்லவுமில்லை, சிலுவையில் அறையவுமில்லை. அந்த யூதர்களுக்கு நபி ஈஸா (அலை) அவர்களைப் போன்ற ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. அல்லாஹ் அவர்களை தன் அளவில் உயர்த்திக் கொண்டான். இதுவே சத்தியமான உண்மை. இதை விசுவாசங்கொண்டு அல்லாஹ்வை மட்டும் வணங்கத் தகுதியான ஒரே கடவுளாகவும், நபி முஹம்மது (ஸல்) அவர்களை இறைவனின் இறுதித்தூதராகவும், பரிசுத்த குர்ஆனை இறைவனின் இறுதி வேதமாகவும் நம்பி, தூய இஸ்லாத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொள்ளாததுவரை எந்த கிருஸ்தவருக்கும் பரலோக ராஜ்யத்தில் வெற்றியுமில்லை, ஈடேற்றமுமில்லை. கிருஸ்தவ நண்பர்கள் இனியாவது சிந்திப்பார்களா?  

நன்றி: IIP ONLINE
.

5 Comments:

  1. Unknown said...
    வழிகாட்டி என்ற தலைப்பில் ஆரோக்கியமான மறைநூல் கருத்துக்களை, மக்களுக்கு தெளிவாக காட்டுகின்ற உங்கள் முயற்சிக்கு நன்றி.


    இயேசு கூறியதையும் அதற்கு கிறிஸ்துவர்கள் கொடுக்கின்ற விளக்கத்தையும் பல காலமாக விவாதித்து வருகின்ற சூழலில் யோனாவின் அடையாளத்தை பற்றிய விளக்கத்தை தந்துள்ளீர்கள்.முதலில் முகமதுநபியையும், முகமதுநபியால் மிகவும் மதிக்கப்பட்ட இயேசுநபி பற்றி பார்ப்போம்.இறைதூதர்கள் கூறும் வார்த்தைகள் அனைத்தும் அவர்களுக்கு சொந்தமானவைகள் அல்ல. அதை அவர்களுக்கு கொடுத்தது வானதூதர்களே !
    இப்படியிருக்க முகமதுநபி தந்தவைகள் உண்மை என்றால் இயேசுநபி சொன்னவைகளும் உண்மையே.இயேசுநபியும் "ஏகஇறைவனை "பற்றிதான் மக்களுக்கு போதித்தார் என்பது உண்மையே, அதை நீங்களும் குறிப்பிட்டுள்ளீர்கள் .ஏனென்றால் இயேசுவும் தன்னை இறைவன் என்று சொல்லவில்லை. இறைவனை உரிமையோடு பிதா என்று தான் சொன்னார்.இறைதூதர்கள் தந்த சான்றுகள் அனைத்தும் வானதூதர்களால் தரப்படும்போது வானதூதர்களுள் பொய்மை உண்டோ? அப்படியிருக்க வாய்ப்பில்லை. அப்படியிருக்க இறைதூதர்கள் சொன்னவைகளும் பொய்யாய் போவதில்லை. அதை பற்றி தெளிவான விளக்கங்கள் தெரியாததால் மனிதர்கள் ஒருவருக்கொருவர் தனது சொந்த கருத்தை திணித்து தனக்கு தோன்றியவைகளையே அதற்கு விளக்கமாக தருகின்றனர்.முதலில் இயேசு அவருடைய சீடர்களிடத்தில் உவமையாக பேசுவதுபோல் உண்மையையே பேசியுள்ளார். அனைத்து உவமைகளும் இறுதியைப் பற்றிய உண்மைகளே.சாதாரண மானுடர்களான நாமே இவ்வளவு தெளிவாய் சிந்திக்கும்போது இறைதூதர் தன்னுடைய முடிவின் கணக்கைப் பற்றி அறியாமல் இருந்திருப்பாரா?யோனாவின் அடையாளத்தை இயேசு கூறியதும், அதற்கு அவருடைய சீடர்முதல் இன்றுவரை கூறுகின்ற அனைத்து கருத்துகளும் வெவ்வேறானவை. இயேசுவிடம் பரிசேயர் நியாயத்தீர்ப்புக்கு முன் நிகழும் அடையாளம் சொல்லுங்கள் என கேட்டதற்கு சொன்ன அடையாளம் தான் யோனாவின் அடையாளம்.(மத்தேயு .12 :40) .
    இதனை இயேசு தன்னுடைய முடிவை பற்றிய அடையாளமாக குறிப்பிடவில்லை என்பதை முதலில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.உலக முடிவைப் பற்றிய அதாவது தீர்ப்பு நாளை பற்றியதெளிவான, சரியான அடையாளமே இந்த அடையாளம். இதே போல் யோவான் (3:13-21)ல் சொன்ன. மூன்று நாட்களும் இறுதியைப் பற்றிய அடையாளமே தவிர அவருடைய காலத்தில் நடந்தவைகள் அல்ல.இயேசு தெளிவாக மூன்று பகல், மூன்று இரவு என்று சொன்னதற்கு காரணம், தன்னுடைய மரணத்தை பற்றிய அடையாளம் என தவறாக எடுத்து கொள்ள கூடாது என்பதற்காகத்தான்.எனவே யோனாவின் அடையாளம் இறுதிநாளின் தீர்ப்புநாளின் அடையாளம் என்பதை நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.யோனாவின் அடையாளம் முதலாம் இயேசுவின் மரணத்திற்கான அடையாளம் அல்ல.இது முழுக்க முழுக்க மறுமைநாளின் இரண்டாம் வருகையின் வருகையின் அடையாளமே.ஏதோ கிருஸ்துவர்கள் மட்டும்தான் வேதத்திற்கான தவறான விளக்கங்களை தருகிறார்கள் என்பது இல்லை. முஸ்லீம் சகோதரர்களும்தான். இறைதூதர்களுக்கே சில அடையாளத்தின் உண்மைகள் தெரியாத போது நம்மை பற்றி என்ன சொல்வது? காரணம் குரானில் பல இடத்தில் உள்ள வசனங்களுக்கு இன்று உங்களை போன்றவர்கள் தவறான விளக்கத்தையே தருகிறார்கள்.அனைத்து இறைதூதர்களும் இறுதியை பற்றி தீர்பப்புநாளின் நெருக்கத்தைபற்றிய விளக்கங்களையே தந்துள்ளனர்.இயேசு 2000ஆண்டுகளுக்கு முன் சொன்னதும் சரி, முகமது நபி 1400ஆண்டுகளுக்கு முன் சொன்னதும் சரி, அனைத்தும் இறுதியைப் பற்றிய, மறுமையைப் பற்றி, அடையாளங்களே.
    Unknown said...
    யோனாவின் அடையாளம் என்பது யூதர்களுக்கு மட்டும் சொன்னது அல்ல. ஒட்டுமொத்த உலகத்திற்கே சொன்ன அடையாளம்.நம் முன்னோர்கள் தெளிவாக தந்தவைகளின் தெளிவு நமக்கு தெரியவில்லை. ஆனால் ஞானம் உள்ளவர்களுக்கு தெளிவாக தெரியும் என்ற கூற்றிற்கு இணங்க இறுதி ஞானகூட்டம் அனைத்தையும் அறியும் காலத்தில் உலகிற்கே ஓர் தெளிவு கிடைக்கும். அப்பொழது குரான் மட்டும் அல்ல, பைபிள் மட்டும் அல்ல, மண்ணுலகில் உள்ள அனைத்து வேதங்களும் மண்ணுக்குள் மறையும் காலம் வரும் விரைவில். மேலும் இயேசுவே இறுதிநாளில் இரண்டாம் வருகையில் நான் அந்நியராய் வருகிறேன் என்றும் , முகமது நபியும் இறுதி நாளில் வேறொறு கூட்டமே சொர்க்கத்தில் இருக்கிறார்கள் என்றும் தெளிவாக கூறியுள்ளனர். இறுதி நாளில் இவ்விரண்டு மார்க்கங்களும் இல்லாமல் "ஏகஇறைகொள்கை" கொண்ட இறைவனுக்கு பந்தமான, ஓர் புதிய மார்க்கமே உலகை நடுதீர்ப்பு செய்து, சொர்க்கச்சோலையில் வாழப்போகிறார்கள் என்பது மட்டும் உண்மை.காரணம் உலகை நல்வழிப்படுத்த ஏக இறைவன் தந்த மார்க்கவழி சான்று குரான் என்றால் இறுதியில் (மறுமையில்) இறைவன் வரும்போது இந்த இறைமறை மறையவேண்டிய அவசியம் என்ன? இறைவன் தந்த மறை இறைவன் வரும்போது மறையக்காரணம் என்ன? ஏப்ரல் 1-2016ஸ்பெயின் நாட்டில் மீனவர் ஒருவர் கடலில் பயணம் செய்தபோது, சூறாவளியால் படகு சிதறுண்டுபோய், கடலில் கவிழ்ந்தது. அந்த மீனவர் கடலுக்குள் விழுந்து மூழ்கிய போது இராட்சத திமிங்கலத்தால் விழுங்கபட்டு மூன்று நாள் அதாவது 3பகல் 3இரவு 72 மணி நேரம் மீனின் வயிற்றிலிருந்து கழிவுடன் வெளியேற்றபட்டு, தீவிரசிகிச்சைக்கு பிறகு நலமுடன் உள்ளார் என்ற செய்தி நியாயதீர்ப்பு நடக்கும் நேரத்திற்கு சற்று முன்பாக, உலகில் யோனாவின் அடையாளம் தோன்றும் என்ற இயேசு சொன்ன வார்த்தை மெய்பட்டுவிட்டன.இப்படி இறுதி நாளின் அடையாளமாய் காட்டபட்ட 72மணி நேரம் கொண்ட 3நாளை அடையாளமாக்கி தந்த இயேசுவினுடைய சான்று அவருடைய முடிவு நாளுக்கு அறிவிக்கப்பட்டது இல்லை என்பது புலனாகிறது.இன்னும் சொல்லப்போனால், அவர் சொல்லும் "மனுஷகுமாரன், மனுஷகுமாரனை ஒத்த" என்ற பதங்கள் எல்லாம் இறுதிகாலத்தில் நீயாயத்தீர்ப்பபிற்கு முன்பு ஏற்படுகின்ற காட்சிகளை குறித்த சொற்களாகும். இயேசு முதல் வருகையில் தேவகுமாரன் ,இரண்டாம் வருகையில் மனுஷகுமாரன் .இந்த தேவகுமாரன் என்ற வார்த்தையை மற்றைய மார்க்கங்கள் வரிந்து கட்டிகொண்டு இறைவன் பெற்றெடுத்த பிள்ளை என்பது போல ஒரு முகாந்தரத்தை முன்வைக்கின்றனர். அந்த பதம் எதற்கு சொல்லபட்டது என்றால் ஒரு தீர்க்கதரிசியோ, இறையாளனோ, தீர்க்கதரிசன காட்சிகளை காணவேண்டும் என்றால் இறைவனால் சிருஷ்டிக்கட்ட உடம்பு தேவதன்மை பெற்றிருக்கிறது என்பது பொருள். அதே ஆன்மா இறுதிகாலத்தில் வந்து பூமியில் வாழ்கின்றபோதும் மற்றவர்களால் இரண்டாம் வருகை என அழைக்கப்படும் அந்த வருகை மனுஷகுமாரன் என குறிப்பிடபடும்.இரண்டாம் வருகை இயேசு தீர்க்கதரிசன காட்சிகளை பார்க்க வாய்ப்பு அற்றவர் என்பது புலனாகிறது. இதை இயேசுவே தன்னுடைய வார்த்தையில், தான் தேவனிடத்தில் சென்றால்த்தான், பிரிதொரு "தேற்றரவாளனை "பூமிக்கு அனுப்புவார். அப்படி வரும் அவர் தாமாக, எதையும் சொல்லாமல் நான் சொல்லியவற்றை தன் சபையிலே எடுத்துக்கூறி, என்னை மகிமைப்படுத்துவார் (யோவான்.16 :7-15).இறுதியில் சூட்சம ஒளிரூபமான, அரூபமான. இதுவரை யாருடைய கண்ணிற்கும் புலப்பட்டிராத "இறைவன் பூமிக்கு வரும்போது "சாதரண மனிதனை, அந்த இறையாளனை உச்ச தேவப்பதவிக்கு, உயர்த்திக்காட்டுவதுதான் இறுதிகட்ட காட்சிகளின் நிலை.எனவே மகன் என்ற வார்த்தையை எடுத்துகொண்டு மதங்களுக்குள் கருத்துபேதமோ, விவாதமோ தேவையற்றது.
    Unknown said...
    இப்படி மானிட மகனாய் மலர்ந்துநிற்கும், இறுதிகாட்சியில் மலர்ந்து நிற்கும் இரண்டாம் வருகை இயேசு, கிருஸ்துவ மக்களோடு தொடர்பு கொண்டு நேரடியாக பேசிக்கொண்டிருக்கிறார் என பிதற்றி திரியும் பேதமையை என்னவென்று சொல்வது? மானுட குமாரனாய் மண்ணுக்கு வரும் அவரையே சர்வ வல்லமை பொருந்தியவராய், தேவனாய் இறைவன் ஆக்கி காட்டுவதற்கு முன், யோனாவின் அடையாளத்தை ஒத்த காட்சி ஒரு வழியாய் பூமியில் அரங்கேற்றம் ஆகும் போதுதான் என சொல்லும்போது, அவரோடு பேசி பல நோய்களை குணபடுத்துவதாக சொல்லிதிரிகின்றனர் போதகர்கள். இயேசுவே தீர்க்கதரிசனம் சொல்லமுடியாத நிலையில் இருக்கின்றபோது தீர்க்கதரிசனம் சொல்லிதிரியும் போதகர்களை இயேசு "கள்ளதீர்க்கதரசிகள் "என சாடுவது சிறப்பாய் தானே இருக்கிறது. இறையாளர்களை பற்றி பேசும்போது (குறையாய்) நாம் ஒன்றை முடிவு கொள்ள வேண்டும். நம்மைவிட அதிக வல்லமை கொண்டவர்கள் அவர்கள். எனவே இறுதியில் வருபவர் மீனோடு வருபர்.நபி கூட குரானில் அவருடைய தெய்வம் அவர்களை புகழேணியில் தூக்கி வைக்கிறார் என யோனாவின் அடையாளத்தை அவரும் அடையாளபடுத்திசொல்கிறார் .(அத்தியாயம் 68:48-50)

    இயேசுவின் கூற்றுபடி இறுதி அடையாளம் யோனாவின் அடையாளம் என்று தெரிகிறது அல்லவா? ஏகாதிபத்திய இறைக்கொள்கையில் ஆணித்தரமாய் நம்பிக்கை கொண்ட இவரின் சொற்கள் அதிலிருந்து நழுவப்பட்டதாக சொல்ல முடியுமா? .ஒரு இடத்தில் மட்டுமின்றி பல இடத்திலும் அவர்கள் தெய்வம் என்று பிரித்து பேசியது ஏன் என்று யோசிக்க வேண்டுமேயொழிய ஏகாதிபத்திய இறைகொள்கையிலிருந்து இறங்கினார் என்று என்னக்கூடாது. அப்படி என்றால் அந்த காரணம் தான் என்ன? .உலகமே அதிசியிக்க போகின்ற அந்த நிகழ்ச்சி மீனோடு வருபவரை மீண்டும் நினைவுபடுத்தி நிற்க வேண்டிய சூழ்நிலையில் ஏக இறைவன் தத்துவத்தை உயர் பிடியாய் கொண்ட இரண்டாம் வருகை இயேசு அறிமுகம் செய்யும் வழிபாட்டிற்குரிய வழி, கடந்தகால வரலாற்றில் பதித்திருக்கும், எல்லா மார்க்க மற்றும் சிலைவழிபாட்டு வழிமுறைகள் உட்பட அனைத்தையும் அழித்து, அனைத்து மார்க்க "மறைகளை மறையவைத்து, புதிய ஆக்கம் பெற்று ஏகாதிபத்திய இறைகொள்கையை உலகத்தில் இறக்கி வைக்கும் போது புத்தம் புதுமையாய் இந்த அடையாளம் புதுமுகவரி தந்து நிற்பதால் இறைவன் அதே இறைவன் என்றாலும் வந்தவிதம், முகவரி தந்த விதம், இவையெல்லாம் பழைய மார்க்கங்களில் ஒன்றிலும் தன்னை இணைத்துக்கொள்ளாத பாதையாய் இருப்பதால், நபி அவர்கள் "அவர்களின் தெய்வம்" எனக்குறிப்பிட்டது புதிய முகவரியில் இறுதிக்காட்சி புலப்பட்டு நிற்பதால்தான் என உணரவேண்டும் ...
    Unknown said...
    இதோ சீக்கிரமே வருகிறேன், என்ற பதம் நிறைய தீர்க்கதரசிகள், எடுத்தாண்டுள்ளனர், ஏன்? இயேசுவும், நபியும் கூட எடுத்தாண்டுள்ளனர்.இயேசுவின்படி 2000ஆண்டுகளாகியும், நபியின்ப்படி 1400ஆண்டுகளாகியும், இன்னும் மறுமை வரவில்லையே என கேட்போருக்கு, மார்க்கவாதிகள் மட்டமான விளக்கங்களை மலரவைக்கின்றனர். காலம் என்பது இலட்சோப லட்சம் ஆண்டுகள் போல சித்தரித்து அதில் 1000ஆண்டுகள் என்பது, சிறியக் காலமே என ஒன்றுக்கும் உதவாத விளக்கங்களை முன் வைத்து நிற்கின்றனர்.மறுமைக்கான அடையாளங்களை, நியாயத்தீர்ப்பிற்கான அடையாளங்களை சொல்லிக்கொண்டுவரும் தீர்க்கதரசிகள், அந்த அடையாளங்களில் இருந்துதான், சீக்கிரம் என்ற வார்த்தையைச் சொல்லி வைத்தார்களே ஒழிய தன்னுடைய காலத்திலிருந்து என்று சொல்லவில்லை. படிப்பவர்கள் அத்தனைப் பேரும் தீர்க்கதரசிகள் அனேகர் சீக்கரமே வருகிறேன் என்ற பதத்தில் பேசும்போது உதாரணமாய் இயேசுவிற்கும் , நபிக்குமே 600
    ஆண்டுக் காலகட்ட இடைவெளி இருக்கும்போது இயேசு சொன்ன பதம் அவர் காலத்திற்கு அருகில் என்றால், நபியின் தோற்றம் பூமியில் வருவதற்கு முன்பே மறுமை நடந்து முடிந்திருக்க வேண்டும்.அவ்வாறு நிகழவில்லை. அப்போதாவது சிந்தித்திருக்க வேண்டும்."நபிகள் நாயகம் "சீக்கிரம் என்ற வார்த்தையை விரைவு என்ற பதத்தில் பயன்படுத்தும்போது அவர் காலத்திற்குப் பிறகு 1400 ஆண்டுகளுக்குள் எப்போதே நடந்து முடிந்திருக்கவேண்டும் நியாயத்தீர்ப்பு. எனவே சீக்கிரம் என்ற பதம் அவர்கள் வாழ்ந்தக் காலத்தைப்பற்றிது அல்ல. யோவானின் திருவெளிப்பாட்டு தீர்க்கத்தரிசனம், முழுக்க முழுக்கக் காட்சிகள் அத்தனையும் இறுதி நேரத்தில் வரும் இறையாளனையும், அவருடைய மிகச்சிறிய கூட்டத்தையும், அவர்கள் வாழ்க்கையும், அவர்கள் வாழம் நாட்டின் அமைப்பையும், அப்போது நிகழும் உலக அரசியல் அமைப்புக் காட்சிகளையும் சொல்லி செல்கிறது. அதன் முடிவிலும் இதோ சீக்கரமே வருகிறேன்.தாகமுள்ளவன் என்னிடம் வரட்டும், விருப்பம் உள்ளோர் வாழ்வு தரும் தண்ணீரை இலவசமாய் குடிக்கட்டும்
    என்று கூறுவது இன்றையக் கிருஸ்த்துவர்கள் , கொடுத்துக்கொண்டிருக்கின்ற அப்பமோ, திராட்சைரசமோ குறித்துச் சொன்னது அல்ல. இறுதியில் வருகின்றவர், இறுதி நாளில் தன் கூட்டத்திற்க்கு தாகத்திற்க்கு(நித்திய வாழ்விற்க்கு) தருபவை என்ற காட்சியை விளக்குவதாகவே அமைய வேண்டும்.
    Unknown said...
    இன்னும் சிலத் தமிழ் முனிவர்களின், தீர்க்கதரிசனங்கள் திவ்வியமாய், திடமாய், இறுதிக்காட்சிகள் அறுதியாய், உறுதியாய் சொல்லப்பட்டு நிற்கின்றபோது இதே விரைவு
    என்ற பதத்தை, சீக்கிரம் என்ற பதத்தை சிறப்பாய் சொல்லி நிற்கின்றபோது தாங்கள் சொல்லும் அடையாளத்திலிருந்தே நாட்கள் எண்ணப்படுவதை சுட்டிக்காட்டி தெளிவாய் உபதேசித்து நிற்கிறார்கள். ஒரு வகையில் அனைவரும் "ஏக இறைவனைப் பற்றி " சொல்லிநிற்கின்ற அதேநேரத்தில் ஒன்றை ஊன்றி கவனித்துப்பார்த்தால் பிதா என்றும், "அல்லா "என்றும் "பரம்ப்பொருள் "என்றும் " பரப்பிரம்பம் "என்றும் "சிவன் "என்றும் "குரு "என்றும், சொல்லிநிற்க்கும் பதங்கள் "ஏக இறைவனை " குறிப்பனவாய் இருக்கின்றன. யோவான் திருவெளிப்பாட்டில் சொல்லியிருக்கும் அத்தனை காட்சிகளும் இரண்டாம் வருகை இறையாளனை சார்ந்ததே ஒழிய முதலாம் வருகை இயேசுவை சார்ந்தது அல்ல. முதல் வருகையில் வந்த ஆன்மா இரண்டாம் வருகையில் வருகிறது என்பது மட்டும் திண்ணமான உண்மை. முதல் வருகையை ஆராதிக்கும், எந்த "கிருஸ்த்துவ மக்களுக்கும் "இரண்டாம் வருகை காட்சிகள் சொந்தமானது அல்ல. சொந்தமாயிருந்தால் இறுதியில் வருபவர், ஏன் சிலுவையை முறிக்கவேண்டும். அத்தோடு "அல்லா "என்றப்பதத்தையும் நீக்குகின்றார்.சிலைவழிப்பாடு செய்யும் அத்தனை கோயில்க்களையும் மூடுக்கினறார். 4வேதங்களையும், 32 புராணங்களையும், புனித நூலாய்க் கருதும், பகவத்கீதையையும், பைபிளையும், குரானையும், மற்றும் இருக்கின்ற பழையது அத்தனையும் ஒழித்து "புதியஞானத்தை",புதிய வழியை தடம் பதிக்கிறார் என்று எண்ணும்ப்போது இப்படி இறுதியில் வருபவர் தனிப்பட்ட ஒரு மதத்திற்கு சொந்தமானவர் அல்ல.அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவர். எந்த மதத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும் அவர்களையும் இரட்சித்து ஆட்க்கொள்கிறார் என்றால் அவர் எந்த மதமும், எந்த மார்க்கமும் சாராத, விரும்பாத தனிவழிப்பபாதையை தடம்பதித்து நிற்பவர் என்பதை எண்ணும்போது மனம் கடந்து வந்தப் பாதையை, காலத்தைப் பார்க்கின்றப்போது மனக்கசப்பாய் பார்த்தாலும், இறைவன் இறுதிநேரத்தில் அனைத்துலக இரட்சகராய் நிற்க்கப்போகிறார், என எண்ணும்போது மனம், அந்நாளை நோக்கி வேகமாய் நடைபோடுகிறது.உலகில் உள்ள இதுகாறும் வந்த அத்தனை தீர்க்கத்தரசிகளையும் அலசி ஆராயும்போது கிடைக்காத பெரும்விளக்கம் "தமிழ்நாட்டு முனிவர்களின் "தீர்க்காத்தரிசனங்களை பார்க்கின்றப்பொழுது மற்றைய மதங்களில் உரைக்கப்பட்ட தீர்க்கத்தரிசனங்களே இவர்கள் தீர்க்கத்தரிசனத்திலும் அப்படியே அடங்கியிருக்கிறது என்றாலும் இதையெல்லாம் தாண்டி எந்த நாட்டில் நிகழும் எந்த மாநிலத்தில் நிகழும் என்ற விளக்கம் தமிழ்நாட்டு முனிவர்களின் தீர்க்கத்தரிசனத்தில் மட்டும் தான் திடமாய் சொல்லப்பட்டிருக்கின்றது. இடத்தை சொல்லும், மாநிலத்தை சொல்லும், மாவட்டத்தை சொல்லும் தீர்க்கத்தரிசனம் உலகில் பைபிளாகட்டும், குரானாகட்டும் எதிலும் உரைத்திடாத அரிய விளக்கம் தமிழ்ழொழியில் எழுதிய முனிவர்களின் தீர்க்கத்தரிசன கூற்றுகளில் அடங்கியிருப்பதை பார்க்கின்றப்போது வியப்பிலும் ,வியப்பாய்த்தான் இருக்கிறது.

    எனவே இறுதிக்காட்சிகள், இடம் பெறும் இடம் "தமிழ்நாடு " என சொல்லும்போது , இறைவன் நீயாயத்தீர்ப்பை நடத்துவதற்க்கு தேர்ந்தெடுத்த மண் "தமிழ்நாடு "எனநினைக்கும்போது இறைவருகையால் ஏற்படும் சொர்க்கப்படைப்பு தமிழ்நாடு என எண்ணும்போது தமிழ்நாடு உலகளவில் உயரிய. முதலிடத்தைப் பிடித்து "இறை மாநிலம் அது நிறை மாநிலம்" என்ற அந்தஸ்த்தோடு நிற்க்கப்போகும் காட்சியை எண்ணும்போது தமிழன் என்ற அளவில், மனம் பெருமைப்பட்டு தலைநிமிர்ந்து நிற்கிறது. தமிழினம் உலகெங்கும் தலைநிமிரும் காலம் இதோ விரைவில். நாட்கள் எண்ணப்படுகிறது .இறைவனின் பாதத்தை அடைவதற்க்கு, சிரம்தாழ்ந்து பணிவதற்க்கு தயராவோம்.நம்மிடையே இருக்கும் பேதத்தை அகற்றி இறைவன் பாதம் ஒன்றே பணிவோம்.இறைவனே எல்லாம் வல்லவர். அவரை மிஞ்சிய வல்லமை உலகில் யாருக்கும்மில்லை. அவர் கரம் பற்றப்போகும் மக்களுக்கு இனி மூப்பு ஏது? நோய் ஏது? ஊனம் ஏது? மரணம் ஏது? பயம் ஏது? அதர்மம் ஏது? தர்மத்தின் தலைவன் பாதம் பற்றி பணிவோம்.வாழ்க இறைவன் புகழ்!!!....

Post a Comment