Site Network: Home | Blogcrowds | Gecko and Fly | About

குழந்தைக் கொலைகள் பைபிளில்!

பாவம் அறியாத பச்சிளம் குழந்தைகளைக் கொலை செய்ய வேண்டும் என்ற உபதேசம் நிச்சயமாக கடவுளின் உபதேசமாக இருக்க முடியாது. இனவெறி கொண்ட புரோகிதர்களின் கைச்சரக்காகவே இதனைக் கருத முடியும்.

மோசே என்னும் தீர்க்கதரிசிக்கு கர்த்தர் கட்டளையிட்டதாக பைபிளில் இடம் பெற்றுள்ள வன்முறைகளை இத்தொடரில் காண்போம்.

மிதியான் என்ற நகரத்து மக்களைப் பழிவாங்குமாறு மோசேயிடம் கர்த்தர் கூறினாராம். அதைத் தொடர்ந்து நடை பெற்ற நடவடிக்கைகளாக பைபிள் கூறுவதாவது:


எண்ணாகமம்: அதிகாரம்: 31
பன்னிரண்டாயிரம் படைவீரர்களைத் திரட்டிக் கொண்டு மிதியான் மீது யுத்தம் நடக்கிறது. (31:5)
அப்படை வீரர்கள் அங்குள்ள ஆண்கள் அனைவரையும் கொலை செய்தார்கள் (31:7)
பெண்களையும் குழந்தைகளையும் சிறை பிடித்தார்கள்; ஆடு மாடுகளையும் மற்ற மிருகங்களையும் அவர்களின் சொத்துக்கள் அனைத்தையும் கொள்ளையிட்டார்கள் (31:9)
அவர்களின் ஊர்களையும் குடியிருப்புகளையும் தீக்கிரையாக்கினார்கள் (31:10)
இவற்றைச் செய்த பின்னரும் மோசே க்கு படைவீரர்கள் மேல் திருப்தி ஏற்படவில்லையாம்! ஏன் தெரியுமா? மேற் கொண்டு படியுங்கள்:

(மோசே)அவர்களை நோக்கி, ஸ்திரீகள் எல்லாரையும் உயிரோடே விட்டுவிட்டீர்களா? பேயோரின் சங்கதியிலே பிலேயாமின் ஆலோசனையினால் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணக் காரணமாயிருந்தவர்கள் இவர்கள்தானே; அதினால் கர்த்தரின் சபையிலே வாதையும் நேரிட்டதே (31:16)

இஸ்ரவேலர்கள் கடவுளுக்கு மாறு செய்யத் தூண்டியவர்கள் பெண்கள்(?!) அதனால் இது சரிதான் என்று கிறிஸ்தர்வகள் ஒருவேளை இதற்கு நியாயம் கூறலாம். அட! குழந்தைகள் என்ன பாவம் செய்தன? பின் வரும் கட்டளையைப் பாருங்கள்:

ஆகையால் குழந்தைகளில் எல்லா ஆண்பிள்ளைகளையும், புருஷசம்யோகத்தை அறிந்த எல்லா ஸ்திரீகளையும் கொன்றுபோடுங்கள். (31:17)
உடலுறவில் ஈடுபட்டு கன்னி கழிந்த பெண்கள் அனைவரையும் கொன்று விட்டு கன்னி கழியாத பெண்களை (குழந்தைகளையும்) உயிரோடு விட்டு வைக்க வேண்டுமாம். எதற்குத் தெரியுமா?

ஸ்திரீகளில் புருஷசம்யோகத்தை அறியாத எல்லாப் பெண்பிள்ளைகளையும் உங்களுக்காக உயிரோடே வையுங்கள். (31:18)
“உங்களுக்காக” அதாவது நீங்கள் அவர்களை அனுபவிப்பதற்காக

போரில் அடிமைகளாக்கப் பட்ட பெண்களுடன் உடலுறவில் ஈடுபடுவதை இஸ்லாம் அனுமதித்ததைக் கொச்சைப் படுத்தி விமர்சிக்கும் கிறிஸ்தவர்களே! இதோ பச்சிளம் பெண் குழந்தைகளைக் கூட அனுபவிப்பதற்கான லைசன்சை பைபிள் வழங்கியுள்ளதே?! மல்லாந்து படுத்துக் கொண்டு நீங்கள் காரி உமிழ்ந்தால் அது உங்களின் முகத்துக்கே திரும்பி வரும் என்பதை அறியாமல் இருந்து விட்டீர்களே?

இவ்வாறு கர்த்தரின் கட்டளையால்(?) படைவீரர்களுக்கு விருந்தாக அளிக்கப்பட்ட (கிறிஸ்தவர்களின் பாணியில் கற்பழிக்கப்பட்ட) பெண்கள் எத்தனை பேர் தெரியுமா? பைபிளே சொல்லட்டும்

புருஷசம்யோகத்தை அறியாத ஸ்திரீகளில் முப்பத்தீராயிரம்பேர் இருந்தார்கள். (31:35)

முடிவுரை:
அநியாயமாக மனித உயிர்கள் பறிக்கப்படுவது பயங்கரவாதம் ஆகும். இறைவனிடத்தில் இதற்கு எந்த அங்கீகாரமும் கிடையாது.


அநியாயமாக ஒரு உயிரைக் கொல்பவன் மனித சமூகம் முழுவதையும் கொலை செய்ததற்குச் சமமாவான் என்கிறது திருக்குர்ஆன் (5:32)

தாம் செய்த அக்கிரமச் செயல்களை நியாயப் படுத்த இனவெறி கொண்ட புரோகிதர்கள் சேர்த்த கைச்சரக்குகளே பைபிளில் நியாயம் கற்பிக்கப்படும் பயங்கரவாதக் கருத்துக்கள். இதற்கு கடவுளின் அங்கீகாரம் ஒருபோதும் இருக்க முடியாது. இவ்வாறிருக்க பச்சிளம் குழந்தைகளைக் கூட ஈவு இரக்கமின்றி கொலை செய்யவும் கொள்ளையிடவும் அழிச்சாட்டியம் செய்யவும் ஆணையிடும் உபதேசங்களை எங்ஙனம் இறைநூல் என்று கூற இயலும்? அறிவுடையோர் சிந்திக்கட்டும்.

முற்றும் 
 
நன்றி: http://christianpaarvai.blogspot.com 
 
 

0 Comments:

Post a Comment