Site Network: Home | Blogcrowds | Gecko and Fly | About

முஹம்மது நபிக்கு முந்தைய இறைத்தூதர் என்ற வகையில் இயேசுவை முஸ்லிம்கள் முஹம்மது நபிக்கு இணையாக மதிக்கிறார்கள்.இயேசுவின் உண்மையான போதனைகளைப் பின்பற்றுவதோடு,அவர் தடுத்தவற்றை இன்றளவும் பின்பற்றி இயேசுவைக் கண்ணியப்படுத்துவதில் முஸ்லிம்களே முன்னனியில் இருக்கிறார்கள். 

இயேசுவின் முக்கியமான போதனைகளில் ஒன்றான மது,விபச்சாரம் போன்ற பாவச்செயல்களை இஸ்லாம் ‘ஹராம்’ என்று தடுக்கிறது. கிறிஸ்துவின் பிறந்த தினமாகக் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் மதுவுடன் தொடங்கும் களியாட்டங்கள் பைபிள் தடுக்கும் பெரும் தீமைகளுடனேயே தொடர்ந்து தீமையிலேயே முடிகின்றன. இயேசுவின் மீது உண்மையான மரியாதை வைத்திருந்தால் அவரைப் பின்பற்றுவதாகச் சொல்பவர்கள் இதனைச் செய்வார்களா? 

இயேசு மூலம் வந்த இறைபோதனைகள் அவருக்குப் பின்வந்த சீடர்களால் களங்கப்பட்டுள்ளன என்று இஸ்லாம் சொல்வதில் நியாயமிருக்கிறதா இல்லையா என்பதை பைபிளை நம்பும் சகோதரர்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். 

இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளாக கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர்-25இல் கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது. இதற்கும் பைபிளிலோ அல்லது ஆரம்பகால உண்மையான கிறிஸ்தவர்களிடமோ சரியான சான்றுகள் ஏதும் இருந்திருக்கவில்லை என்ற தகவல் ஆச்சரியமளிக்கிறது ! 

இயேசுவின் பிறப்பு பற்றியக் குறிப்பு பைபிளில் காணப்படுகிறது. ஆனால் எங்குமே அவரின் பிறந்தநாளைக் கொண்டாடச் சொல்லவில்லை. பிறந்த நாளைக் கொண்டாடுவதை முஹம்மது நபியும் செய்தது இல்லை; ஏனெனில் அது இஸ்லாத்தில் இல்லாதது.பிறந்த நாளைக் கொண்டாடுவது இயேசுவுக்கும் முஹம்மது நபிக்கும் முந்தைய பாகன்களின் வழிமுறையாகவே இருந்துள்ளது. 

இன்னும் சொல்லப்போனால் கிறிஸ்துமஸுடன் தொடர்புடைய கிறிஸ்துமஸ்மர அலங்கரிப்பை பைபிள் கண்டிக்கிறது!

“The customs of the people are worthless, they cut a tree out of the forest, and a craftsman shapes it with his chisel, they adore it with silver and gold, they fasten it with hammer and nails so it will not totter” (Jeremiah 10-3,4).

கிறிஸ்துஸ்துவுக்குப் பின் சுமார் நான்கு நூற்றாண்டுகள் வரை கிறிஸ்துமஸ் கொண்டாடப் பட்டிருக்கவில்லை. Oxford Guide to Ideas and Issues of the Bible (Bruce Metzger and Michael Coogan, editors, 2001) என்ற நூலில் கிறிஸ்துமஸ் பற்றியும், 

இயேசுவின் பிறந்த தினம் பற்றியும் கீழ்கண்டவாறு விளக்குகிறது, 

Twenty-five December was by the fourth century [ A.D.] the date of the winter solstice, celebrated in antiquity as the birthday of Mithras [an ancient Persian god] and of Sol Invictus [the 'unconquered' sun god]. In the Julian calendar the solstice fell on 6 January, when the birthday of Osiris [the Egyptian god of the dead] was celebrated at Alexandria. By about 300 CE [ A.D.], 6 January was the date of the Epiphany in the East, a feast always closely related to Christmas” பார்க்க:http://www.gnmagazine.org/issues/gn43/bornchristmas.htm

டிசம்பர் 25 ஐ இயேசுவின் பிறந்த தினமாக கி.பி.354 இல் போப் லிபெரியஸால் பிரபலப்படுத்தப்பட்டு கி.பி,435இல் போப் சிக்ஸ்டஸ் III ஆல் முதல் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது. இதே நாளில்தான் ரோமர்களும் பார்சியர்களும் தங்கள் கடவுளின் தினமாகக் கொண்டாடி வந்தனர், ரோமன் கத்தோலிக்க அறிஞர் மரியோ ரைட்டி (Mario Righetti ) சொல்வதுபோல், 

“To facilitate the acceptance of the faith by the pagan masses, the Church of Rome found it convenient to institute the 25th of December as the feast of the birth of Christ to divert them from the pagan feast, celebrated on the same day in honor of the ‘Invincible Sun’ Mithras, the conqueror of darkness” (Manual of Liturgical History, 1955, Vol. 2, p. 67). பார்க்க: http://www.ucgstp.org/lit/gn/gn008/gn008f03.htm

இயேசு/ஈஸா (அலைஹி) அவர்கள் சொன்னவற்றைப் பின்பற்றாமல் அவர் தடுத்த மது, விபச்சாரம், இறைவனை மறந்த களியாட்டங்களைப் பின்பற்றுவது இயேசுவை மதிப்பவர்கள் செய்யக் கூடாத ஒன்று என்பது என் தாழ்மையான கருத்து. 

மாற்றுக் கருத்திருந்தால் சகோதரர்கள் பகிர்ந்து கொள்ளலாம்!

நன்றி: http://www.islamkalvi.com/

0 Comments:

Post a Comment